Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஜனவரி 31

ஹலாலா? ஹராமா?

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.

கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.

பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).

கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் "பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று அடம் பிடித்தனர். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.

நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், "அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.

உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.

உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு "ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.

மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.

இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)" என்று தெரியப்படுத்துங்கள்.

இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/
2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
and Click CHEESE AND PEPPERONI menu.

source : http://paalaivanathoothu.blogspot.com/2011/01/pork-pepperoni.html

ஞாயிறு, ஜனவரி 30

கைகளுக்கு அழகு தரும் மருதாணி



பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மை உடையவை. இலைகளின் சாறு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மலர்கள் தூக்கத்தை தூண்டக் கூடியவை.

இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது.

சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்

கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.

''மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.


மருத்துவப் பயன்கள் :
கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

Jasakkallah kair: Sis.Hasheena
http://hasheena.blogspot.com

சனி, ஜனவரி 29

ஜித்தாவில் வெள்ளம்

ஜித்தாவில் வெள்ளம், January 26th 2011 wednesday




ஜித்தாவில் மழை வந்தால் அதன் அலங்கோலத்தை சொல்லி தெரிவதைவிட மேலேயுள்ள வீடியோவில் பாருங்கள்.
நம் நாட்டிலெல்லாம் ஒரு வருடம் மழை வரவில்லையென்றால் பிரச்சனை, இங்கே மழை வந்தால் தான் பிரச்சனை. நான் வந்து இரண்டரையாண்டுகளில் இது நான் சந்திக்கும் இரண்டாவது பெரும் விபத்து.

இதற்கு முன் பெய்த (டிசம்பர்,2009 ஆண்டு)மழையால் நடந்த உயிர் இழப்பை விட இந்த ஆண்டு குறைவுதான் என்றாலும் மக்கள் பட்ட அவதி இரண்டும் வெவ்வேறு விதம்

1.முன்னர் மக்கள் சுதாரிக்கும் முன் அவர்களை காரோடு இழுத்து சென்று விட்டது,

2.இப்பொழுது கார்களை ஆங்காங்கே போட்டு சென்று விட்டதால் மக்கள் உயிர் தப்பியது.

இப்படியே ஜித்தாவில் எல்லா ஏரியாவையும் சொல்லிவிட்டு என்னுடைய ஏரியாவ சொல்ல மறந்துட்டேன்

என் வீட்டுக்கு பக்கத்து ரோட்டிலுள்ள பெட்ரோல் ஷ்டேசனில் தண்ணியுடன் பெட்ரோல் கலந்ததால் பெட்ரோல் எல்லாம் தண்ணீருக்கு மேல் மிதக்க ஆரம்பித்தத்ன் விளைவு அந்த பகுதியையே பெரும் விபத்துக்குள்ளாக்கி விட்டது, எப்படி நெருப்பு பற்றியது என தெரியவில்லை. குடும்பத்துடன் தண்ணீரில் மாட்டிக் கொண்ட காரை தள்ள முற்பட்ட போது நெருப்பின் சிறு பகுதிஅதன் மேல் விழுந்து பற்றி எரிய ஆரம்பித்து ,கிட்டத்தட்ட அங்கிருந்த 5 கார்கள் எரிந்து விட்டன. ஒரு வழியாக நெருப்பை அணைத்து விட்டார்கள். இன்னும் நாங்கள் சந்தித்ததை எழுதினால் கட்டுரை நீண்டுக்கொண்டே போகும் அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

கீழே கொடுத்துள்ள் அனைத்து வீடீயோக்களையும் பார்த்தாலே மேலே சொன்ன இவ்விபத்தை அறிந்துக் கொள்ளலாம்.











காத்திருக்குது அபாயம்

காத்திருக்குது அபாயம்
------------------------------------------------------------------------------------------------------

மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலத்தால் சூழப்பட்ட அழகான தீபகற்ப நாடு இந்தியா. உலக அளவில் தட்பவெப்ப நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காலம் தவறி மழை, ஓரிடத்தில் அதிக மழை, அருகே உள்ள பகுதியில் கடும் வெயில் என காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை வதைக்கிறது. வானிலையை கணிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்களும் திணறுகின்றனர். இதுபோன்ற தட்பவெப்ப நிலை மாற்றங்கள் அனைத்திற்கும் “கடலில் ஏற்படும் மாற்றங்களே’’ காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


காலநிலை மாற்றங்களால் உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது. தட்பவெப்ப வேறுபாடுகளால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2050ம் ஆண்டில் இந்தியவைச் சுற்றியுள்ள கடல்களின் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும் என்று ஐஎப்எம்ஆர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


கடல் மட்டம் உயரும்போது அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று இப்போதே எச்சரித்துள்ளது அந்நிறுவனம். தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1076 கி.மீ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் உள்ளன. 13 மாவட்டங்களும் கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 10 மீட்டர் வரை தாழ்வாக உள்ளன. எனவே கடல் மட்டம் 1 மீட்டர் உயரும்போது 1091 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி முழுவதும் நிரந்தரமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதனால் தமிழகத்தில் சுமார் ஸி1.27 லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடலோரத்தில் உள்ள துறைமுகங்கள், மின் நிலையங்கள், விவசாய நிலங்கள், சாலைகள், நிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும். துறைமுகங்களில் ஸி36,595 கோடி அளவிற்கும், மின் நிலையங்களில் ஸி13,814 கோடி, விவசாய நிலங்களில் ஸி14,608 கோடி, சாலைகளில் ஸி3,145 கோடி, நிலங்களில் ஸி61 லட்சத்து 15,471 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். கடலோரங்களில் மூன்றரை லட்சம் மீனவர்கள் உட்பட ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் நீருக்குள் மூழ்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.


நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படும். இந்த பகுதிகள் கடல் மட்டத்தைவிட மிகத் தாழ்வாக உள்ளன. இதனால் பாதிப்புகளும், இழப்புகளும் இப்பகுதியில் அதிகமாக இருக்கும். சென்னை, கடல் மட்டத்தில் இருந்து 5 மீட்டர் தாழ்வாக உள்ளது. சென்னையில் கடலோரத்தில் பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தரமணி, வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் இன்னும் 20 ஆண்டுகளில் கடல் நீர் சூழ்ந்துவிடும் என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.


விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள்

18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள கடல் மட்டத்தைவிட 100 மீட்டர் தாழ்வாகவே கடல்மட்டம் இருந்துள்ளது என்றும், கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில்தான் கடல் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் டைட்டஸ் என்ற விஞ்ஞானி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளார். 2100ம் ஆண்டில் 10 செ.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும் என்று ஹாப்மேன் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு 1 முதல் 2 மி.மீ வரை கடல் மட்டம் உயருகிறது என்று வாரிக் மற்றும் ஆர்லமென்ட்ஸ் என்ற விஞ்ஞானிகள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி நிரூபித்து உள்ளனர். கடலில் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகள் அனைவருமே கடல் மட்டம் உயர்ந்து வருகிறது என்றுதான் தெரிவித்துள்ளனர்.


அப்துல் கலாம் கருத்து

இந்தியாவில் தட்பவெப்ப மாறுபாட்டால் நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறுவதற்கு நீர்நிலைகளும் நமக்கு முக்கிய தேவை. நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்தால் விவசாயம் குறைந்து விடும். 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த நீர்நிலைகளின் நிலையை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் புரியும். ஆந்திராவில் உள்ள கோதாவரியில் மழை பெய்யும்போது மட்டும் 2,500 டிஎம்சி தண்ணீர் வீணாகிறது. சாதாரண நாட்களில் 700 டிஎம்சி வீணாகிறது. இதேபோல எல்லா மாநிலங்களிலும் தண்ணீர் வீணாகிறது. வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கைகள் தேவை.


அழிவை தடுக்க என்ன வழி

கடலோரப் பகுதிகளில் முழுமையான பகுப்பாய்வுகள் நடத்தப்பட வேண்டும். கடலோர பகுதிகள் குறித்த மிக விரிவான மற்றும் உண்மையான தகவல்களை சேகரிக்க வேண்டும். கடலோர கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் தட்பவெப்ப மாற்றத் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். முன் எச்சரிக்கை கருவிகளை முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். மண் அரிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


மெரினா மூழ்கும் அபாயம்

சென்னையில் 1 மீட்டர் கடல் மட்டம் உயரும்போது மெரினா கடற்கரை மூழ்கிவிடும் அபாயம் உள்ளது. இது ஒரே நாளில் நடக்காது. ஆனால் சிறிது சிறிதாக கடலின் ஆதிக்கம் அதிகரித்து இது நடக்கும் என்கின்றனர். மெரினா போலீஸ் நிலையம் பின்புறமுள்ள நொச்சிக் குப்பம், மாட்டான் குப்பத்தை சேர்ந்த வயதான மீனவர்கள் கூறும்போது, “நாங்கள் சிறுவனாக இருந்த காலத்தில் கடல்நீர் மட்டம் ரொம்ப தூரத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிக அருகில் உள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர்மட்டம் உள்ளே வந்துள்ளது’’ என்றனர்.


சிரபுஞ்சியில் குடிநீர் இல்லை

இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடமாக இமயமலை அருகே உள்ள சிரபுஞ்சி இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அங்குள்ள மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிரபுஞ்சியில் தற்போது லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.


கடலுக்குள் கபாலீஸ்வரர் கோவில்

சாந்தோம் ஆலயத்துக்கு பின்புற கடல் பகுதியில்தான் உண்மையான கபாலீஸ்வரர் கோவில் இருந்தது. அந்த இடத்தை கடல் நீர் ஆட்கொண்ட பிறகுதான் மயிலாப்பூரில் புதிய கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. கடலுக்குள் இன்னும் பழைய கபாலீஸ்வரர் கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடலுக்குள் புற ஊதா கதிர்கள் தாக்கம்

புவி வெப்பம் அடைவதால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளையின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் புற ஊதாக் கதிர்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிலப் பகுதிகளை மட்டும்தான் புற ஊதாக் கதிர்கள் தாக்குகிறது என்று நினைத்திருந்த ஆராய்ச்சியாளர்கள், கடலிலும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடலின் மேற்பரப்பில் இருந்து 10 மீட்டர் ஆழம் வரை புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது என்று “ஸ்மித்’’ என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இதனால் கடல்நீரின் வெப்பம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இன்னும் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 80 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் இறந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சுனாமி அலைகளும், பெரிய புயல் சின்னங்கள் உருவாகி நிலப்பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஜஸாக்கல்லாஹ் கைர்: http://www.kiliyanur.com/general/danger.html

வெள்ளி, ஜனவரி 28

அல்லாஹ்

அல்லாஹ்......!!!

கருணை நிறைந்த இறைவன்...
அல்லாஹ்..!

பொருமை நிறைந்த இறைவன்..
அல்லாஹ்..!!

பெரும் புகழுக்கு உரிய இறைவன்..
அல்லாஹ்..!

நாங்கள் உன்னிடமே மீழ்வோம்....
சுபஹானல்லாஹ்...!

மாநபி வழி தந்த இறைவன்...
அல்லாஹ்...!

இறைமறையை இறக்கிய இறைவன்..
அல்லாஹ்...!

உடல் உயிர் கொடுத்த இறைவன்..
அல்லாஹ்..!

நாங்கள் வணங்கும் இறைவன்..
அல்லாஹ்..!!

நன்மை தீமை பிரித்த இறைவன்...
அல்லாஹ்...!

ஐந்து கடமை அளித்த இறைவன்..
அல்லாஹ்....!

வணங்குதல் ஒன்றே உனக்களிப்பேன்..
நன்றி கொண்டு வாழ நான் மறப்பேனா..

உன் புகழ் உலகம் நிறைக்க..
உன் அடிமை நானாக இருப்பேன்...
.

ஜஸாக்கல்லாஹ் கைர்: http://islamuravukal.blogspot.com/

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்

President of Iran (OUR PRESIDENT / PRIME MINISTER SHOULD LEARN)







The Fox New TV (US) asked the Iranian President Ahmedi Nijad;

"When you look into the mirror in the morning what do you
say to yourself"?
He answered: I see the person in the mirror and tell him
"Remember, you are no
more than a small servant, ahead of you today is the heavy
responsibility, and
that is to serve the Iranian nation".

இரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்


நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.

‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.

உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.

உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:

நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் கூற,

“இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்”(அல்குர்ஆன் 69:40, 41)

என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

அடுத்து இவர் ‘ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் நான் கூற,

“(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 69:42, 43)

என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.

நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து,

‘உமரே நீ எங்கு செல்கிறாய்?’ என்று கேட்க,

‘நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.’ என்றார்.

அதற்கு நுஅய்ம் ‘நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?’ என்று அச்சுறுத்தினார்.

அவரை நோக்கி ‘நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது’ என்று உமர் கூறினார்.

அதற்கு நுஅய்ம் ‘உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்’

என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.

அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள ‘தாஹா| எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர்,

‘உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?’ என்று கேட்டதற்கு

‘நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை’ என்று அவ்விருவரும் கூறினார்கள்.

அப்போது உமர் ‘நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு அவரது மச்சான் ‘உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?’ என்று கேட்க,

உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.

கோபம் கொண்ட உமரின் சகோதரி,

‘உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.

தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது.

‘உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதற்கு அவரது சகோதரி ‘நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்’ என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார்.

பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி ‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் ‘ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்’ என்று கூறி, தொடர்ந்து ‘தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு ‘இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!‘ என்று கேட்டுக் கொண்டார்.

உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து,

‘உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, ‘அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்’ என்றுரைத்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் ‘உமர் வந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். ‘ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!’ என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி

‘உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!’ என்று கூறினார்கள்.

உமர் (ரழி) ‘அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்’ என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.)

இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.

“முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” நூலிலிருந்து.

ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி

தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

நன்றி : www.tamililquran.com


வானத்தில் புதிய சூரியன் தோன்றும்!


விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!



தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது. பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.
இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.
இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.
Source:wwwnathiyalai.blogspot.com

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்

(கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.)

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

  • கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
  • குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
  • குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
  • வரவு, செலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

  • 1. வருமானம்
  • 2. ஒத்துழைப்பு
  • 3. மனித நேயம்
  • 4. பொழுதுபோக்கு
  • 5. ரசனை
  • 6. ஆரோக்கியம்
  • 7. மனப்பக்குவம்
  • 8. சேமிப்பு
  • 9. கூட்டு முயற்சி
  • 10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

  • 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
  • 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
  • 3. கோபப்படக்கூடாது.
  • 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
  • 5. பலர் முன் திட்டக்கூடாது.
  • 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
  • 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  • 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
  • 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
  • 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
  • 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
  • 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
  • 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
  • 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
  • 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
  • 17. ஒளிவு மறைவு கூடாது.
  • 18. மனைவியை நம்ப வேண்டும்.
  • 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
  • 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
  • 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
  • 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
  • 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
  • 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
  • 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
  • 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
  • 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
  • 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
  • 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  • 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
  • 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
  • 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
  • 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
  • 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
  • 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
  • 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

  • 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
  • 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
  • 3. எப்போதும் சிரித்த முகம்.
  • 4. நேரம் பாராது உபசரித்தல்.
  • 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
  • 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
  • 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
  • 8. அதிகாரம் பணணக் கூடாது.
  • 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
  • 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
  • 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
  • 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
  • 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
  • 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
  • 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
  • 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
  • 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
  • 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
  • 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  • 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
  • 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
  • 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
  • 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
  • 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
  • 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
  • 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
  • 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
  • 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

  • 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
  • 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
  • 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
  • 4. விரும்பியதைப் பெற இயலாமை.
  • 5. ஒருவரையொருவர் நம்பாமை.
  • 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
  • 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
  • 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
  • 9. விருந்தினர் குறைவு.
  • 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
  • 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
  • 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
  • 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
  • 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

  • 1. அன்பாகப் பேசுவது
  • 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
  • 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
  • 4. குறை கூறாமல் இருப்பது.
  • 5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
  • 6. இன்முகத்துடன் இருப்பது.
  • 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
  • 8. பிறரை நம்புவது.
  • 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
  • 10. பணிவு
  • 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
  • 12. பிறர் வேலைகளில் உதவுவது.
  • 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
  • 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
  • 15. சுறுசுறுப்பு
  • 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
  • 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
  • 18. நகைச்சுவையாகப் பேசுவது.
  • 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
  • 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
  • 21. நேரம் தவறாமை.
  • 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
  • 23. தெளிவாகப் பேசுவது.
  • 24. நேர்மையாய் இருப்பது.
  • 25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

  • 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
  • 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
  • 3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
  • 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
  • 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
  • 6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
  • 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
  • 8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
  • 9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
  • 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்.

நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

வைரத்தின் வரலாறு

வைரம்!

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.


உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.




வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.


வைரம் எப்படி உருவாகிறது?


பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.


வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?


இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.


வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster)என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.




வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.


இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.


வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds)என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.


ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.


சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.

உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.


ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.


வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.


இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.


பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut)என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.


வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.


பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.


வைரத்தில் தோஷம் என்றால் என்ன ?

அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.


வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.


இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.


இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.


SOURCE:http://senthilvayal.wordpress.com