Pages

வியாழன், செப்டம்பர் 30

உலகை ஏமாற்றிய அமெரிக்கா

வாஷிங்டன்,செப்.12:உலக வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.

கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

20 கருத்துகள்:

  1. அண்டபுளுகன் அமெரிக்கா
    ஆப்கன் இராக் போர்
    எதற்காக?

    பதிலளிநீக்கு
  2. அது இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பு
    அதன்னால் தான் போர் பூச்சாண்டி ஈரான் மேலேயும்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி ராஜா
    சிலுவையுத்தத்தை அமெரிக்கா தொடருகிறதா ? என்ற கேள்வியை கேட்டு அடுத்த கட்டுரைக்கு வழிகாட்டி உள்ளீர்கள்
    நன்றி விரைவில் சமர்பிக்கின்றோம்

    பதிலளிநீக்கு
  4. புதிய தகவலாக உள்ளதே
    அப்போ தீவிரவாதிகள் பேசிய வீடியோ ஆடியோ கேசட் எல்லாம் பொய்யா?

    பதிலளிநீக்கு
  5. ஏங்க செத்துப்போன அத்தனை பேரும்
    மனிதர்கள் தானே
    ஆதாரம் இல்லாமல் இப்படி செய்வாங்களா நீங்க முஸ்லிகள் என்பதால் தவறு செய்தவர்களை காப்பதற்காகஇப்படி எழுதுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்கா எப்போதும் தனது நாட்டை தந்து பொருளாதாரத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளும்
    மற்றநாடுகளின் இறையாண்மை ,மனித வளங்கள் போன்றவற்றை காலில் போட்டு மிதித்து கொல்லும்

    பதிலளிநீக்கு
  7. நன்றி திரு கணேஷ்குமார்
    புதிய தகவல் என்றெல்லாம் கிடையாது
    மீடியாக்கள் மறைத்த உண்மை இது
    இஸ்லாமியர்கள் செய்ததாக கூறி அவர்கள் இஸ்லாத்தின் மீது தங்களுக்கு இருந்த அரிப்பை தீர்த்து கொள்ள பயன்பட்டதால் இவ்விசய்தின் உண்மை நிலை வெளி உலகுக்கு தெரியாமல் போய் விட்டது

    பதிலளிநீக்கு
  8. அன்பு நண்பர் வல்லவன்
    அவர்களுக்கு
    இங்கு நாம் அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்க்க வில்லை
    குற்ற சாட்டு ஆதார்மில்லாதது எனும்போது அதை சொன்னது அதே நாட்டை சார்ந்த அதே கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் ,வல்லுனர்கள் தான் என்பதுமே நாம் பதிவிட முதற்காரணம்
    ஆப்கன் இராக் நாட்டில் கொல்லப்பட்டதும் வரத்தக மையத்தில் கொல்லபட்டதும்
    மனித உயிர்கள் தான்
    அமெரிக்க
    அரசாங்கம் நடத்திய இப்படுபா
    தக செயலை கண்டிப்பது நமது முதற்கடமை

    பதிலளிநீக்கு
  9. வர்த்தக மையத்தை தாக்கியது முஸ்லிகள் அல்ல என்பதற்கான ஆதாரம்
    டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள் இப்போது தமிழிலும் யூடுயுப் விடியோ காட்சியில் உள்ளது பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  10. வந்த மகராசா பெருமக்கள் ஓட்டு போடாமல் போனது நியாயமா?

    பதிலளிநீக்கு
  11. அப்துல்ரகுமான்30 செப்டம்பர், 2010 அன்று 2:03 AM

    அமெரிக்கா எல்லா நாட்டு விஷயத்திலேயும் மூக்க தான் நுழைக்கும் என்று பார்த்தால் சொந்த நாட்டு மக்களையே அழிக்கும் படு மோசமான காரியத்தை செய்து இருக்கான்னு தெரிஞ்சதும் பக் என்று ஆயிடுச்சி

    பதிலளிநீக்கு
  12. அமெரிக்கா ஈராக் போரில் படுதோல்வி அடைந்து வருகிறதா? நிலைமை என்ன ?

    பதிலளிநீக்கு
  13. அமரிக்காவை தட்டிக்கேட்க உலகில் ஒருநாடும் இல்லை ஆகையால் அவர்கள் இப்படி செய்யத்தான் செய்வார்கள் நிருபிக்கப்பட்டாழும் சரியே!
    உதாரணம் இந்தியாவில் இந்துமுன்னனி சகாக்களை போலத்தான் பகிரங்கமாக நாங்கள் தான் கொலை செய்தோம் எங்களை யாரும் ஒன்றும் செய்ய இயலாது இவர்கள் இந்திய தாதாக்கள் அவர்கள் உலக தாதாக்கள்.

    பதிலளிநீக்கு
  14. உங்களை ஞாயப்படுத்த இம்மாதிரியான பதிவுகளை பதிவிடுகிறீர்கள். இரட்டை கோபுரங்கள் தகர்த்தது முஸ்லீம்கள்தான் என்பது உலகறிந்த விஷயம். மனசாட்சி உள்ள உண்மையான (முஸ்லீம்) மனிதனுக்கு இது தெரியும். நேரடியாக அமெரிக்காவுடன் மோத திராணி இல்லாத பேடிகள் செய்த செயல் இது. அதற்காக அமெரிக்காவை ஞாயப்படுத்தவில்லை. அந்த இரட்டை கோபுரத்தில் இருந்த 3000 அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள். உண்மை என்றுமே மறையாது. மறைக்கவும் முடியாது. வீரம் என்பது எதிரியோடு நேரடியாக மோதுவது. அப்பாவி மக்களை கொண்று குவிப்பது வீரமும் அல்ல, ஆண்மையும் அல்ல.

    பதிலளிநீக்கு
  15. மிஸ்டர் மனசாட்சி இதில் நாங்க எங்க ஆளுங்கள நியாய்படுத்த சொல்றதா இருந்தா உங்க கிட்ட ஒரே கேள்வி
    அங்கு மொத்தம் எத்தனை பேர் பணிபுரிந்தனர் ?8000 பேர் கொள்ளப்பட்டது 3000 பேர் மீதி ஆள் எங்கே ? ஷிப்ட் மாறி இருக்குமா ? இல்லை தப்பித்த அனைவர்களும் யூதர்கள் அன்று ஏதேனும் யூத பண்டிகையா ? இல்லை எப்படி அத்தனை பேரும் லீவ் லட்டர் கூட கொடுக்காமல் எங்கே போனாங்க ? திங் பன்னுங்க சார் ?

    பதிலளிநீக்கு