Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, நவம்பர் 24

கம்ப்யூட்டரால் கண் வலியா?

கம்ப்யூட்டரால் கண் வலியா? டிவென்டி-20 ரூல்சை ஃபாலோ பண்ணுங்க

கடந்த 11ம் தேதி உலக பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டது. முன்பெல்லாம் 40 வயதை 
தாண்டியவர்கள்தான் மூக்கு கண்ணாடி அணிவார்கள். ஆனால், தற்போது 2ம் வகுப்பு படிக்கும் 
மாணவன் கூட மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, உணவுப்பழக்கமே காரணம் என்கிறார் அமெரிக்கன் ஐ கேர் சென்டர் டாக்டர் டி.பி.பிரகாஷ். 


கண் மருத்துவ பரிசோதனையில் தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், கண் பார்வை குறைபாடுக்கான காரணங்கள் குறித்தும் இதோ அவரே விளக்கம் தருகிறார்... 


செவ்வாய், அக்டோபர் 30

புயல் எச்சரிக்கை கூண்டுகள் ...

மழைகாலங்களில்  தொலைகாட்சிகளில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு ரமணன் அவர்களை அடிக்கடி பார்க்கின்றோம் ....
அவர் வழக்கமாக காற்றழுத்த  தாழ்வு நிலை ... மண்டலம் ..... இப்படி அடிக்கடி சொல்வார் .
செய்திகளிலோ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற பட்டது என்றும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு எண் சொல்கிறார்கள் அல்லவா ? அதன் விளக்கம் தான் என்ன ?
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களையும் பார்க்கலாம்

வியாழன், அக்டோபர் 25

மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!



மக்களுக்காகவே ஒரு மக்கள் மருத்துவமனை!

ரு டாக்டர், நோயாளிகளிடம் கொஞ்சம் கருணையோடு நடந்துகொண்டாலே, 'மக்களின் மருத்துவர்’ எனக் கொண்டாட ஆரம்பித்துவிடுவோம். உண்மையிலேயே, ஏழை மக்களே சேர்ந்து ஒரு மருத்துவமனையை நடத்தினால் எப்படி இருக்கும்? இந்தக் கனவை நனவாக்கி இருக்கிறது, சுகம் சிறப்பு மருத்துவமனை.

மதுரை ஃபாத்திமா கல்லூரி அருகே உள்ள ஜெயராஜ் நகரில் அமைந்திருக்கிறது, 23 படுக்கைகளுடன் கூடிய சுகம் சிறப்பு மருத்துவமனை. மதுரை மாவட்டத்தில் களஞ்சியம் சுய உதவிக் குழுக்களின் கீழ் உள்ள சுமார் 15 ஆயிரம் பேர் தலா  100 வீதம் பங்குத்தொகை கொடுத்துத் தங்களுக்கென உருவாக்கிய மருத்துவமனை இது. களஞ்சியம் குழுவில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து இங்கே இலவச சிகிச்சை அளிக்கிறார்கள்.

வெள்ளி, அக்டோபர் 12

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், 

அதற்கான தீர்வும்


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

சனி, அக்டோபர் 6

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

வெள்ளி, அக்டோபர் 5

இன்னலை நோக்கி ஒரு அமைதி பயணம்


அனுப்புதல்

இடிந்தகரை பெண்கள்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
திருநெல்வேலி மாவட்டம்

அன்புள்ள சகோதரி,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இது நாங்கள் எழுதும் நான்காவது கடிதம். இந்த முறை உங்களுக்குச் சொல்ல எங்களிடம் அதிக செய்திகள் இல்லை.

நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆம்! செப்டம்பர் 10ம் தேதி நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தெரிவிக்கும் முரண்பட்ட தகவல்கள், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் இவற்றுக்கு நடுவே எங்களுடைய வாழ்க்கை அந்தரத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

வியாழன், அக்டோபர் 4

யாருக்கு விரோதி ஆக போறீங்க ?

ஸ்ரீலங்கா - பாகிஸ்தான் செமிஃபைனல் 

பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டா 
தேசவிரோதி ஆயிடுவோம்.

ஸ்ரீலங்கா ஜெயிக்கணும்னு ஆசைபட்டா
தமிழினவிரோதி ஆயிடுவோம்.

# மொத்தத்துல கிரிக்கெட்டே வேணா ன்னு சொல்லலாம்னு
பாத்தா
 "ஒட்டுமொத்த மனித குலத்துக்கே விரோதியா"
ஆயிருவோம்ய்யா ஆயிருவோம் .




இது என் நண்பர் முஹம்மது முபாரக் போட்ட மொக்கை 

திங்கள், அக்டோபர் 1

பர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-சகுந்தலா நரசிம்ஹன்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சனி, செப்டம்பர் 29

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்

தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

வியாழன், செப்டம்பர் 20

கருத்து சுதந்திரம் ? கிலோ எவ்வளோங்க ..?


கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே  அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?

டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?

ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா  ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே  அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?