Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, செப்டம்பர் 29

இருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்

தமிழகம் எனும் திறந்த வெளியில்
எங்கும் இருட்டு எதிலும் இருட்டு
சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம்
மற்ற எல்லா மாவட்டங்களிலும்
கிட்டதட்ட 16 மணி நேரங்கள் மின் தடை

எட்டு மணி நேர வேலையை மக்கள் விரும்புவது போல்
மின்சாரமும் இப்போ வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறது  .

அது சரி மின் வெட்டு என்பதை மக்கள் இப்போது பழகி கொண்டே விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

வியாழன், செப்டம்பர் 20

கருத்து சுதந்திரம் ? கிலோ எவ்வளோங்க ..?


கருத்து சுதந்திரங்கறது இதுவரை எமது பூமியில் இருந்துள்ளதா ? முஸ்லிம்கள் ஒரு மோசமான படத்திற்கு எதிராக போராடுகிறார்களே  அவர்கள் மட்டும்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களா?
அவர்களை பற்றி சொல்வதற்கு முன் நமக்கு என்னா தகுதி இருக்குன்னு பார்க்கலாமே ?

டாம் 999 படம் நினைவு இருக்கா ? தமிழ்நாட்டில் அது ஓடுச்சா..?

ஜெயராம் எனும் நடிகர் தமிழச்சிகளின் கலரை பற்றி பேசியபோது அவர் வீடு தாக்கபட்டதே..? அது என்னா சுதந்திரம் ?
ஓ தீபா மேத்தா  ....வாட்டர் ... திரைப்படம்.... இந்துத்துவா .... அட அதெல்லாம் பெரிசா பேச படாது...
ஓவியன் உசேன் என்பார் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தாராமே  அப்பு அப்ப எங்கேப்பா போச்சு உங்க கருத்து சுதந்திரம் ?

திங்கள், செப்டம்பர் 17

ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...?

 ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...? 

இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

“தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று”

கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

1986 இல் ‘தினமணி’யில் அணுஉலையின் பாதிப்புகள் பற்றி டி.என்.கோபாலன் அவர்களின் மிக விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது. இந்தக் கட்டுரை அன்றைய காலகட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணுஉலை எதிர்ப் பியக்கங்களின் செயல்பாடும் இந்த விவாதங்களின் வழி தொடங்கியது.
 கூடங்குளம் அணுஉலையை எதி

ர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.
 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
    1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

வியாழன், செப்டம்பர் 13

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்


இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.

வறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா

சமீப காலமாக முகநூலில்சோமாலிய இப்தார் படம் ...
சோமாலியரின் கேள்விக்கு அழுத தொலைகாட்சி நிகழ்ச்சி ...
 மீடியா அவ்வப்போது உமிழும் சோமாலிய கடற்கொள்ளை.... சோமாலியாவின் உண்மை முகம்தான் என்ன?
அந்த வறுமையின் வரலாறு தான் என்ன ?

 ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.

 நபிகளின் தோழர்களுக்கு நாடு கொடுத்த நஜ்ஜாசியின் பிரதேசம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதாவது (கி மு 3000 ) இந்த பகுதி மிக முக்கியமான வியாபார கேந்திரமாக பல பகுதிகளுக்கு இருந்துள்ளது . அப்போதைய பேரரசுகள் இந்த பகுதியுடன் வியாபார தொடர்பை கொண்டிருந்தன.
அரேபிய பகுதிகளிலும் இவர்களது வணிகதொடர்பு நெருக்கமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது.
       முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் பகிரங்க பிரசாரத்தை ஆரம்பித்த உடன் அப்போதைய மக்கத்து குரைஷிகள் எண்ணற்ற தொல்லைகள் கொடுக்க நபி அவர்களுக்கு தான் கஷ்டபட்டாலும் தனது தொண்டர்கள் கஷ்டப்பட கூடாது என சிறந்த தலைமை பண்பின் வெளிப்பாடாய் முத்ல் ஹிஜரத் செய்ய அனுமதிக்கிறார்கள் ..
                                அதற்கு முன்பே அதற்கான சாதகமான இடத்தை தேர்வு செய்து அபிசீனியா அதாவது இன்றைய சோமாலியா உள்ளடக்கிய பகுதிக்கு அனுப்புகிறார்கள் ..
           அங்கே நஜ்ஜாசி எனும் மன்னர் ஆட்சி செய்கிறார் ...
அங்கு புகலிடத்தை கண்டார்கள்.
இன்னொரு குழுவும் மக்காவிலிருந்து அபிசீநியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொள்கிறது .
        மக்கத்து குறைஷிகள் நஜ்ஜாசி மன்னரிடம் மிகுந்த வியாபார தொடர்பு உடையவர்கள் என்ற சிறப்பு அந்தஸ்தின் காரணமாக முஸ்லிம்களை திருப்பி அனுப்பிவிட கோரிக்கை வைக்கபடுகின்றது.
ஆனால் விசாரித்து நீதமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் தனது நாட்டில் கண்ணியத்துடன் தங்க அனுமதித்தார்.
( இங்கே அகதிகள் முகாம் அமைக்க வில்லை ... எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவே அனுமதித்திருக்கிறார் .. மத சுதந்திரம் உட்பட ..)

இஸ்லாமிய வரலாற்றில் ஹபச எனும் பெயர்பெற்ற இப்பகுதிக்கு கலிபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் முழுமையாக சென்றடைந்தது .

என்ன வளம் இல்லை அந்த திருநாட்டில் ....

   சோமாலியா மிகபெரும் கடற்கரையை கொண்டுள்ள நாடு ..
மிக முக்கிய இயற்கை வணிகமாக மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்ற நாடாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் சமீபகாலமாக வறுமைக்கு எடுத்துகாட்டு சொல்லும் நாடாக மாற்ற பட்டிருக்கின்றது .
   உலகின் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடாக மட்டுமல்லாது தகரம் மற்றும் யுரேனியம் ஆம் இன்று உலகை ஆட்டிபடைக்கும் அணுகுண்டின் அடிப்படையான யுறேனியமும் சோமாலியாவில் அதிகமாகவே கிடைக்கின்றது ...
அப்புறம் என்ன எண்ணெய் உண்டு
யுறேனியமும் உண்டு
விடுவார்களா ..?
உலக நாட்டான்மைகள் .....இருந்தும் ஏன் வறுமை ...?

                                                       ........   இறைவன் நாடினால் அலசுவோம் ......