Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, பிப்ரவரி 26

உணவு பிணியா? நிவாரணியா?

உணவு பிணியா? நிவாரணியா?

நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.

எவ்வளவு, எவ்வாறு உண்பது?

உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்

•உணவு உட்கொள்ளும் நேரம்
•உண்ணும் முறை
•உண்ணும் அளவு
•சமைக்கும் முறை
•உணவின் வகைகள்

உணவு உட்கொள்ளும் நேரம்

உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும்

உண்ணும் முறை

உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும். ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும். உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.

உண்ணும் அளவு

ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.

சமையல் முறை

நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும். சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.

1.காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும்

2.அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்தது

3.வறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.

4.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.

5.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.

6.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்

7.ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

உடலுக்கு உகந்த உணவுகள்

தானிய வகைகள்

அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.

பயிறு மற்றும் பருப்பு வகைகள்

கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தொலியுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரேதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.

காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்

உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.

பால்

பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மீன்

மீன் சிறந்தாரு உணவாகும். மீனை தினசரி உணவாகவே உட்கொள்ளலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் மீன்களில் அடங்கியுள்ளன. மீனைப் பொரியல் வறுவல் செய்வதை விட வேகவைத்து உண்பது சிறந்தது.

இறைச்சி, முட்டை

இறைச்சி வாரத்தில் ஓரிரு முறைகள் மட்டும் உட் கொள்க. மட்டன் பீஃப் போன்றவை குறைந்த அளவில் மட்டும் உட்கொள்க. அவற்றின் கொழுப்புகள் இதயத்துக்கு ஊறு விளைவிக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. முதியவர்கள் முட்டை உண்பதைக் குறைக்க வேண்டும். வாரத்தில் ஒன்றோ இரண்டோ உட்கொள்க. குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி வேகவைத்த முட்டை கொடுக்கலாம். முட்டையின் வெள்ளைக் கரு தினமும் கொடுக்கலாம். முட்டை, இறைச்சி, முதலியவற்றை வறுவல் அல்லது பொரியல் செய்து உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரை, நீரிழிவு நோயாளிகள் கவனிக்க

1.இனிப்பு உண்பதைத் தவிர்க்க.

2.எண்ணெய், தேங்காய் முதலியவை உபயோகிப்பதில் கட்டுப்பாடு வருத்தவும்

3.சரியான நேரத்தில் உண்ணவும்

4.வறுவல் பொரியல் முதலியவை உண்பதை விட்டு விடவும்

5.பழ வகைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு அதிகம் வேண்டாம்

6.காய்கறிகள், கீரைகள் உணவில் சோ்த்துக் கொள்க.

7.தோல் அகற்றிய கோழிக்கறி உண்ணலாம். மாட்டுக் கறி உண்பதைத் தவிர்க்கவும்

8.புரோட்டா, பேக்கறி ரொட்டிகள், கேக், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவற்றை தவிர்த்து விடவும்.

9.உப்பின் அளவைக் குறைக்கவும்.

10.தவிட்டுடன் கூடிய தானியங்களை உட்கொள்ளவும்

11.பாலின் அளவைக் குறைக்கவும். தினமும் 250 மில்லி அளவில் அதிகமாக வேண்டாம்.

12.உணவின் அளவில் கட்டுப்பாட தேவை

13.எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் வரை நீர் அருந்தவும்.

14. டீ, காஃபி அதிகமாகக் குடிக்கக் கூடாது

சர்க்கரை, கொழுப்பு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை எல்லா வயதினரும் குறைப்பதே சிறந்தது

வெள்ளி, பிப்ரவரி 25

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை!

அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை!


னைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று துணைவேந்தர் மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்தார்.

புகையிலைப் பொருள்களான சிகரெட், புகையிலை அடங்கிய பாக்கு, மெல்லும் புகையிலை ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல இருதயநோய் அல்லது மாரடைப்புவர அதிகவாய்ப்பும் உள்ளது.


எனவே புகையிலைப் பொருள்களை பயன்படுத்தாதீர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதைத்தொடர்ந்து இந்திய சுகாதாரத் துறையும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து நூறு அடி தூரத்திற்குள் புகையிலைப் பொருள்கள் விற்க தடை விதித்துள்ளது.



இந்த நிலையில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் புகையிலை பொருள்களை மருத்துவக்கல்லூரிகளில் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான கூட்டத்தை பிப். 23 அன்று நடத்தியது.


கூட்டத்தில் மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழக முதல்வர்கள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் பேசியதாவது:-
துணைவேந்தர் Dr.மயில்வாகனன் நடராஜன்


தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், சித்தமருத்துவம் உள்ளிட்ட அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மொத்தம் 350 உள்ளன.


இந்த கல்வி நிறுவனங் களில் 10ஆயிரம் ஆசிரியர்களும், 55 ஆயிரம் மாணவ-மாணவிகளும் உள்ளனர். புகையிலைப் பொருள்கள் பயன்படுத் தக்கூடாது என்றும் புகையிலை பயன்படுத்தாத நிறுவனம் என்று அறிவிக்கப்படுகிறது.


அதற்கான விளம்பர பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்படும். கல்லூரிகளின் வாயில் களில் கண்டிப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படும். நூலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பரப் பலகைகள்
வைக்கப்படும். கல்லூரி வளாகத்தில் புகையிலைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


மாணவப் பருவத்தில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அது மாணவர் சமுதாயம் முழுவதும் சென்றடையும். விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பின்னர் புகையிலை பொருட்களை ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பயன்படுத் தினால் அபராதம் மட்டு மல்ல அவர்கள் தற்காலிக பணிநீக்கம் கூட செய்யப்படுவார்கள். இவ்வாறு மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் பேசினார்.


அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா, இயக்குநர் மருத் துவர் டி.எஸ்.சாகர் உள் பட பலர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை புகையிலை கட்டுப்பாடு மய்ய மருத்துவர் வி.சுரேந்திரன், மருத்துவர் இ.விதுபாலா ஆகி யோர் செய்து இருந்தனர்.

முஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை

இலக்கு 2020 அல்ல 2050 !

பள்ளப்பட்டியில் ஆளூர் ஷாநவாஸ் எழுச்சியுரை!


ரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இயங்கி வரும் உஸ்வா நூலகத்தின் சார்பில், 'முஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை' என்றத் தலைப்பில்,
கடந்த 20 -11 -2010 அன்று மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மெளலவி.முபாரக் பாஷா உலவி அவர்களின் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லியாவுதீன் சேட் மற்றும் சமூக ஆர்வலர் அஸ்கர் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில், மெளலவி.முஹம்மது யூசுப் தாவூதி அறிமுக உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆவணப்பட இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது:

''இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணிக்கு இரத்த சாட்சியாக இந்த ஊர் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணின் மைந்தரான கலீலுர் ரஹ்மான் ஹசரத் அவர்கள் நேதாஜிக்கு மிக நெருக்கமானவராகவும், அணுக்கமானவராகவும் இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தியவர். மிகச் சிறந்தப் பத்திரிகையாளர். தனது எழுத்துக்களால் விடுதலை வேட்கையை விதைத்தவர். அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த மண்ணில் உங்களோடு உரையாடக் கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களின் நிலை நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது, நாளை எப்படி இருக்க வேண்டும் என்றத் தலைப்பின் கீழ் இங்கே நாம் திரண்டிருக்கிறோம். நேற்று என்பது நமக்கு இழப்புகளாலும், வலிகளாலும், வேதனைகளாலும் நிரம்பியது.எனவே நேற்று நமக்கானதல்ல. இன்று நாம் அந்த வலிகளிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் மீள எழுவதற்கான வழிகளைத் தேடாமல் ஏதேதோ வகையில் சிதறிக் கிடக்கிறோம். எனவே இன்றும் நமக்கானதல்ல. நாளையையாவது நமக்கானதாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். நாளையும் நமக்கானதாக இல்லை என்றாகி விட்டால் இந்த சமுதாயத்தை எவராலும் பாதுகாக்க முடியாது.

நேற்றும் இன்றும் நம்மை இறைவன் பாதுகாத்தான். நாளையும் நம்மை நிச்சயம் அவன்தான் பாதுகாப்பான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவன் சில வழிமுறைகளை நம்மிடம் தேடச் சொல்லியிருக்கிறான். அதை நாம் தேடியிருக்கிறோமா என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி. இறைவன் நமக்கான உணவை நாம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைத்து விட்டான். அப்படியிருந்தும் நாம் ஏன் உணவைத் தேடி பயணிக்கின்றோம்; ஏன் தொழில் செய்கின்றோம் என்றால் நாம் தேடுகின்றோம்.
அது போலத்தான் நமது பாதுகாப்புக்கு இறைவன் இருக்கிறான் என்றாலும், அந்தப் பாதுகாப்பை தேடிக் கொள்கிற இடத்தில், பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்தக் கடமையும் பொறுப்பும் நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கடமையை நாம் இனியும் நிறைவேற்றத் தவறினால் பாதுகாப்பற்றவர்களாக மாறி, நிராயுதபாணிகளாக தெருவில் நிற்போம்.

இன்றைக்கு தொழில் துறையில் நாம் வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்து வருகின்றோம். அதில் வீறு கொண்டு எழுந்து வருகின்றோம்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகின்றோம். புலம்பெயர்ந்து வணிகம் செய்கின்றோம். இப்படியெல்லாம் நாம் தேடி வைக்கிற அந்த செல்வத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நாம் தேடி வைத்திருக்கிறோமா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிற கோவையில் நமது செல்வங்கள் குறி வைத்து சூறையாடப் பட்டதை நாம் பார்த்தோம். நம்மால் அதை பாதுகாக்க முடிந்ததா? ஆயிரம் கோடிக்கு மேலான அந்த இழப்பை நம்மால் தடுக்க முடிந்ததா? நாம் மிகுந்த கடினப்பட்டு, பல்லாண்டு காலம் உழைத்து தேடிவைத்திருக்கும் செல்வத்தை, சில நூறு பேர் திரண்டு சூறையாடுவார்கள் என்றால் அதை தடுப்பதற்கும், நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நாம் தயாராக வேண்டாமா?

காலையில் கடையைத் திறந்து, இரவில் கல்லாவை எண்ணி, பின்னிரவில் உறங்கச் சென்று, மீண்டும் மறுநாள் கடையைத் திறந்து, கல்லாவை எண்ணி, உறங்கச் சென்று என்று, நாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருந்தால், நமக்கான பாதுகாப்பு எங்கிருந்து வரும்? சுற்றி நடக்கிற அரசியலை உள்வாங்காமல்; நமக்கு எதிரான சதிகளை உணராமல்; நம்மை வஞ்சிக்கும் சக்திகளை அடையாளம் காணாமல் நமது பாதுகாப்பை நாம் எப்படி உறுதி செய்துகொள்ள முடியும்?

அரசியலில், அதிகாரத்தில், ஊடகத்தில், கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் என இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிற கட்டமைப்புகளில் நமது நிலை என்ன? இன்றைக்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. ஒரு காய்கறி வாங்குவதிலிருந்து ஒரு சட்டத்தை உருவாக்கி வழங்குவது வரை அதில் அரசியல் இருக்கிறது. இன்றைக்கு கத்திரிக்காயில் பி.டி கத்திரிக்காய் என்றொரு கத்திரிக்காய் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அது அரசியல். அது ஒரு சர்வதேச பொருளாதாரத்தைச் சொல்லுகிற கத்திரிக்காயாக இருக்கிறது. அதற்குள்ளே அமெரிக்காவின் கை இருக்கிறது. அதற்குள்ளே உலகமயமாக்கல் இருக்கிறது. ஆக ஒரு கத்தரிக்காய்தான். ஆனால், அதற்குள்ளே எத்தனை விதமான அரசியல் இருக்கிறது. இந்த அரசியலை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால் நம்மால் இந்த உலகத்தோடு போட்டி போட முடியாது.

நம்மைச் சுற்றி நடக்கும் இந்த அரசியலில் நமது நிலை என்ன? நாம் வாழுகிற தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இங்குள்ள அரசியலில் நமது பலம் என்ன? நம்முடைய அரசியல் அதிகாரத்தை நாம் பெற்றிருக்கிறோமா? அதிகாரத்தின் வாசனையையாவது நாம் நுகர்ந்து பார்த்திருக்கிறோமா? அந்த அரசியலை கைப்பற்றுவதற்கான முறையான திட்டங்கள் எதையாவது உருவாக்கி வைத்திருக்கிறோமா? எதுவுமே இல்லை.

'பெரிய கட்சிகள் நம்மை ஏமாற்றி விட்டன' என்று புலம்புவதையே நாம் அரசியலாக செய்துகொண்டிருக்கிறோம். ஒரு கட்சி ஏமாற்றி விட்டது என்று சொல்லி இன்னொரு கட்சியை நம்பிக் கொண்டிருக்கிறோம். கோபாலபுரத்திற்கும் போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறிச் சென்று சீட்டுக் கேட்கும் நிலையில் இருக்கிறோம். சீட்டுக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை கண்ணியமாகப் பெறுகிற இடத்தில் நாம் ஏன் இல்லை என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழக முஸ்லிம் அரசியலின் தோற்றுவாயாக விளங்கிய காயிதே மில்லத், அவரது அரசியல் வாழ்வில் ஒரு நாளும் பெரிய கட்சிகளிடம் போய் சீட்டுக்காக கையேந்தி நின்றதில்லை. ஆனால், அவரது குரோம்பேட்டை வீட்டிற்கு அண்ணா வந்தார், கலைஞர் வந்தார், எம்ஜிஆர் வந்தார். நேரு, இந்திரா, ராஜாஜி, காமராஜர் என அத்தனை பேரும் வந்தார்கள். அந்த கண்ணியத்தை இன்றைக்கு நாம் ஏன் இழந்தோம்?

காயிதே மில்லத் ஒரு நாளும் 'என் பின்னால் என் சமுதாயம் நிற்கிறது' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டதே இல்லை. ஆனால் அவர் பின்னால் சமுதாயம் நிற்கிறது என்பதை மற்ற கட்சிகளும், தலைவர்களும் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால் தான் அவரைத் தேடி வந்தார்கள். இன்றைக்கு சமுதாயம் தன் பின்னால் நிற்பதாக நம் கட்சிகள் தம்பட்டம் அடிக்கின்றன. ஆனாலும் சமுதாயம் அவர்கள் பின்னால் இல்லை என்பதை பெரிய கட்சிகள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளன. அதனால் தான் 'ஒன்றை எடுத்துக்கொள், என் சின்னத்தில் நில்' என்று குரலை உயர்த்துகின்றன. நாம் அவர்களைத் தேடிச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

காயிதே மில்லத்தை மறுவாசிப்பு செய்ய வேண்டிய நேரம் இது. காயிதே மில்லத்தின் வரலாற்றை முழுமையாகப் படித்தால், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற முஸ்லிம் இயக்கங்களின் அரசியலை நோக்கி ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் கேள்வி எழுப்புவான். அந்த ஆளுமை அவ்வளவு அபாரமான அரசியலை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

பிரிவினைக்குப் பின் இந்த நாடு இரண்டு கூறாகப் பிளவு பட்ட பிறகு, முஸ்லிம்களும், முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்று விட்ட நிலையில், முஸ்லிம் லீக் என்பதே பாகிஸ்தானின் கட்சி என்றாகி விட்ட சூழலில், முஸ்லிம் லீக்கின் பெயரை உச்சரித்தாலே தேச விரோதியாக இந்தியாவில் பார்க்கப்பட்ட காலத்தில், முஸ்லிம்கள் என்றாலே
பிரிவினைக்கு காரணமானவர்கள்; இந்த நாட்டைக் கூறுபோட்டவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட நேரத்தில், 'இந்தியாவில் எஞ்சியிருக்கிற இந்திய முஸ்லிம்களுக்கு நான் தலைமை ஏற்பேன்; அதுவும் அந்த முஸ்லிம் லீக்கின் பெயரிலேயே ஏற்பேன்' என்று சூளுரைத்துக் களம் கண்டாரே காயிதே மில்லத். எவ்வளவு பெரிய துணிவு அது. இன்றைக்கு அப்படிப்பட்ட நெருக்கடி நமக்கு இருக்கிறதா? பிரிவினையின் போது காயிதே மில்லத்திற்கு இருந்த நெருக்கடி இன்றைக்கு இருக்கிற இஸ்லாமியத் தலைவர்களுக்கு இருக்கிறதா? பிரிவினையின் போது இருந்த வலியும் வேதனையும் இன்றைக்கு நமக்கு இருக்கிறதா?

இன்றைக்கு நம்மைக் கூப்பிட்டு தொகுதி பேரம் பேசுவதற்கும், கூட்டணி வைப்பதற்கும் எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம்களின் ஒட்டு வங்கி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், அன்றைக்கு அப்படி இல்லை. அன்றைக்கு முஸ்லிம்கள் என்றால்; முஸ்லிம் லீக் என்றால் ஒதுங்கி நிற்கக் கூடிய ஒரு சூழல். அப்படிப் பட்ட நேரத்தில் எப்படி இந்த சமுதாயத்திற்கு அவர் தலைமை ஏற்றார் என்பதைக் கொஞ்சம் நீங்கள் மீளாய்வு செய்து பாருங்கள்.

நெருக்கடிகள் இருந்தும் அவரால் நேர்த்தியாக அரசியல் செய்ய முடிந்தது. நெருக்கடிகளே இல்லாத போதும் நம்மால் அரசியல் செய்ய முடியவில்லையே ஏன்? என்ற கேள்வியை இன்றைக்கு நமது தலைவர்களை நோக்கி நாம் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். கேள்வி கேட்கும் சிந்தனையாளர்கள் இல்லாமல் போனதால் தான், இன்றைக்கு எந்தத் திட்டமும் இல்லாமல், எந்தத் தொலை நோக்கும் இல்லாமல் அவரவர் வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். தலைமைக்கானப் பண்போ, தலைமைத்துவத்துக்கான கூறுகளோ இல்லாதவர்கள் எல்லாம் தலைமை ஏற்கத் துணிந்து விட்டார்கள்.

காயிதே மில்லத்தைப் போன்ற ஒரு ஆளுமை அவருக்குப் பின் உருவாகாமல் போனதனால் தான் இன்றைக்கு முஸ்லிம் லீக்கே பத்துக்கு மேல் இருக்கிறது. இன்றைக்கு அரசியல் சமூகத் தளத்தில் இயங்குகிற எத்தனை இளைஞர்களுக்கு காயிதே மில்லத்தின் வரலாறு தெரியும். ஏன் தெரியவில்லை, யார் மறைத்தார்கள் அந்த வரலாற்றை? நமது தலைவர்கள் ஏன் நமக்கு காயிதே மில்லத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லவில்லை?

சொன்னால் அது அவர்களுக்கு நெருக்கடி. 'காயிதே மில்லத்தை போல் தான் இல்லை, காயிதே மில்லத்திடம் இருந்த திறமை தன்னிடத்தில் இல்லை. ஆகவே காயிதே மில்லத்தை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப் படுத்தினால்; இந்த இளைஞன் அவரைத் தெரிந்து கொண்டால்; அவரைப் போன்று நம்மிடமும் எதிர்பார்ப்பான். எனவே அதற்கு வழிவைக்கக் கூடாது; காயிதே மில்லத்தின் வரலாறைக் குழி தோண்டிப் புதைத்து விடு' என்கிற ஒற்றை அரசியல் தான்; ஒற்றை சுயநலக் காரணத்தால் தான் அந்த வரலாற்றையே இன்றைய தலைமுறையின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள்.

நமக்கான குரலாக ஒலித்த காயிதே மில்லத்தையும் நாம் படிக்கவில்லை; நமது குரல்வளையை அறுத்த ஆர்.எஸ்.எஸ்ஸின் வரலாற்றையும் நாம் படிக்கவில்லை.நேற்றைய வரலாற்றைப் படிக்காமல் நாளைய வரலாற்றை நம்மால் படைக்க முடியாது. காயிதே மில்லத்தை நாம் கற்றுக்கொள்வதன் மூலம் தான், அவர் நிகழ்த்திக் காட்டியது போன்ற ஒரு அரசியல் வரலாற்றை நம்மாலும் படைக்க முடியும். ஆர்.எஸ்.எஸ்ஸை நாம் அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் எச்சரிக்கையோடு இனி நாம் இயங்க முடியும்.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையைப் பற்றி இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். பாபர் மஸ்ஜித் பிரச்சனை இன்றைக்கு பாபர் மஸ்ஜித் பிரச்சனையாகப் பார்க்கப் படுகிறதா? அது ராமர் கோயில் பிரச்சனையாகி விட்டது. பள்ளிவாசல் முதலில் சர்ச்சைக்குரிய கட்டிடமானது. பின்னர் அது ராம ஜென்ம பூமியானது..இப்போது ராமர் கோவிலாகவே மாற்றப்பட்டு விட்டது. இப்போது எல்லா பத்திரிகைகளும் ராமர் கோவில் பிரச்சனை என்றே எழுதுகின்றன. இங்கேதான் ஆர்.எஸ்.எஸ் தனது கூர்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையை நாம் பாபர் மஸ்ஜித் பிரச்சனையாக அணுகவில்லை. நமது இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸைப் போல திட்டமிட்டு இயங்கவில்லை. இன்றைக்கு தீர்ப்பு வந்த பிறகு தனியார் சட்ட வாரியம் லக்னோவில் கூடி, 'பாபர் மஸ்ஜித் பிரச்சனையை நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையில் முஸ்லிம்கள் கருத்தரங்குகளை நடத்த வேண்டும்' என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். என்ன ஒரு வேகம் பார்த்தீர்களா? பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. இடிக்கப்பட்டே 18 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது தான் நாம் கூடி கருத்தரங்கு நடத்த தீர்மானம் போடுகிறோம். என்ன கொடுமை இது.

அவர்கள் ராமர் கோவில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; கட்டுமானப் பணிகளுக்கு தேவையான தயாரிப்புகளை செய்து முடித்து விட்டார்கள்; எங்கும் எதிலும் ராமர் என்ற அளவுக்கு பரப்புரையை முடித்து விட்டார்கள்; தீர்ப்பை தமக்குச் சாதகமாக வாங்கிவிட்டார்கள். நாம் வழக்கு நடத்தியதை தவிர உருப்படியாக வேறு என்ன செய்தோம். வழக்கு நடத்துவது என்பது ஒரு பெட்டிக் கடைக்காரனின் எதிர்வினை. அவன் கடையை பக்கத்துக் கடைக்காரன் அபகரித்தால் அதை மீட்க அவன் போராடுவான். வழக்கு நடத்துவான். ஆக ஒரு பெட்டிக் கடைக்காரனின் எதிர்வினையைப் போல குறுகிவிட்டது ஒரு மிகப்பெரிய சமூகத்தின் எதிர் வினை.

இப்படி நாம் இருந்தால், இந்துத்துவ சக்திகள் வெற்றி பெறுவார்களா அல்லது நாம் வெற்றி பெறுவோமா?
அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றும், நம்மை தோற்கடித்து விட்டார்கள் என்றும் ஓலமிடுகிற நாம், அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்கிற கோணத்தில் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
அப்படி நாம் சிந்தித்திருந்தால் நமது பள்ளிவாசல் பறிபோயிருக்காது. இன்றைக்குத் தீர்ப்பும் இப்படி வந்திருக்காது.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த போது, பிரபலமான ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று துக்ளக் சோவிடம் பேட்டி கண்டது. தீர்ப்பு உங்களுக்கு திருப்தியா என்ற கேள்விக்கு 'ஆம், திருப்தி' என்றார் அவர். அப்படியென்றால், 'பிரச்சனை இத்தோடு முடிந்து விடுமா அல்லது காசி மதுரா என்று நீளுமா' என்ற அடுத்த கேள்விக்கு, 'அது இந்து மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது' என்றார் அவர். அப்படியென்றால் என்ன அர்த்தம். அடுத்தடுத்த பள்ளிவாசல்களுக்கும் கடப்பாறைகளோடு வருவோம் என்று அர்த்தம். ருசி கண்ட பூனை விடாது என்பது போல இப்போது அவர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள். ஆனால் நாம் எந்த வியூகமும் இல்லாமல் கையறு நிலையில் இருக்கிறோம்.

2010 இல் இப்படியொரு தீர்ப்பை வாங்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் நிகழ்த்திய இடையறாத போராட்டத்தை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். அதை முறியடிப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்க நமது தலைவர்கள் தவறி விட்டனர். 1942 களிலேயே இந்துத்துவப் பள்ளிக் கூடங்களைத் திறந்து, அதில் ராமரின் புராணத்தைப் பாடத் திட்டமாக்கி, அதைப் படித்து உள்வாங்கியவர்களை அதிகாரத்தில் அமர வைத்து, அதன் மூலம் தனது இலக்கை அடைந்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இவ்வாறு அறிவார்ந்த ரீதியில் திட்டமிடவும், வெற்றி பெறவும் தன் தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தானே ஹெட்கேவார்; அவன் தலைவனா, நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் தலைவர்களா?

1925 இல் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு அடித்தளம் போட்டார். அப்படி அவர் தொடங்கும் போது அடுத்த ஐந்து ஆண்டுகளில், தான் இந்தியாவின் பிரதமராகி விட வேண்டுமென்றோ; மகாராஷ்டிராவின் முதல்வராகி விட வேண்டுமென்றோ; வாரியத்துக்கு தலைவராகி விட வேண்டுமென்றோ; வார்டு கவுன்சிலராகி விட வேண்டுமென்றோ அவர் திட்டமிடவில்லை. அவருக்கு ஒரு நூறாண்டு கால கனவு இருந்தது; ஒரு இலக்கு இருந்தது. 1925 இல் அவர் விதை போட்டார்; திட்டமிட்டார்; உழைத்தார்; அடுத்த தலைமுறைக்கு செயல்முறைகளைக் கற்றுக் கொடுத்தார்; 1997 இல் அவரது தலைமுறையைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

ஹெட்கேவாரைப் போல தன் தலைமுறைக்காக சிந்திக்கிற ஒரு தலைவனையாவது நம்மில் இப்போது பார்க்க முடிகிறதா? நம் தலைவர்கள் எல்லோரும் அவர்களின் உழைப்பை அவர்களே அறுவடை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகாரத்தை சுவைக்க அவசரப் படுகிறார்கள். குறைவான உழைப்பைத் தந்து விட்டு, நிறைவானப் பயனைப் பெற நினைக்கிறார்கள். 'கிங்'காக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்; ஹெட்காவாரைப் போல 'கிங் மேக்கராக' இருக்க நம்மில் ஒருவர்கூட இல்லை.

நாம் இயல்பிலேயே வணிக சமூகமாக இருப்பதால் சமூகத்தின் எல்லா அசைவுகளையும் வணிக ரீதியிலேயே அணுகும் மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. காலையில் கடையைத் திறந்தால் இரவில் கல்லாவை எண்ணும் அந்த மனோபாவம் தான் நமக்கு அரசியலிலும் வருகிறது. இந்த மாதம் கட்சி தொடங்கினால் அடுத்த மாதம் அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நாம் அவசரப் படுகிறோம். கட்சியை நிர்மாணித்த தலைவர்களே தேர்தலில் நிற்கிறார்கள்; கட்சியின் தலைமைப் பொறுப்பையும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். எப்படியாவது அவசர அவசரமாக நாம் அடையாளம் பெற்று விட வேண்டும் என்ற முனைப்புதான் இங்கே அதிகம் இருக்கிறது. இந்த பொறுமையின்மையும், இந்த நிதானமின்மையும் தான் நமக்கு பல வீழ்ச்சிகளைத் தந்து கொண்டிருக்கிறது.

அரசியலில் இந்த நிலை என்றால், அரசியலைத் தீர்மானிக்கிற சக்தி மிக்க ஊடகத்தில் நமது நிலை என்ன?
அண்மையில் நான் ஒரு ஜோக் படித்தேன். 'முன்பெல்லாம் கையில் நிதி இருந்தால் சினிமா தயாரிப்பாளர் ஆகலாம்; இப்போதெல்லாம் பெயரில் நிதி இருந்தால் சினிமா தயாரிப்பாளர் ஆகி விடலாம்' என்றிருந்தது அந்த ஜோக். இது வெறும் ஜோக் அல்ல. இதன் பின்னணியில் இருக்கும் ஒரு நுட்பமான அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கலைஞர் குடும்பத்தைச் சார்ந்த கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அருள்நிதி, அறிவுநிதி என அவரது வாரிசுகளின் கையில் சினிமாவும் ஊடகமும் சிக்கியிருப்பதை அந்த ஜோக் எடுத்துச் சொல்கிறது.

கலைஞர் இன்று ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறார் என்றால், அது எப்படி சாமானியனான அவருக்கு சாத்தியமானது? ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிப்பதற்கான வாக்குகளைப் போடுகின்ற மக்களை கைப்பற்ற வேண்டும். மக்களைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கான கருவியாக இருக்கிற சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி என அத்தனையையும் கைப்பற்ற வேண்டும். அப்படி கைப்பற்றும் போது அரசியலை எளிதாகக் கைப்பற்றி விடலாம். இந்த நுட்பத்தை கலைஞர் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டதனால் தான், பெரியாரின் பாசறையில் அரசியல் பாடம் படித்துக் கொண்டிருக்கும் போதே அண்ணாவைப் பின்பற்றி நாடகங்களில் நடித்தார். சினிமாவுக்கு வசனம் எழுதினார். தனது கருத்துக்களை வெகுமக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு அந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எல்லாத் தரப்பு மக்களிடமும் எளிதாகச் சென்றடைவதற்கான வழிகளைக் கையாண்டார். அவரது அந்தப் பயணத்தின் நீட்சிதான் இன்றைக்கு மொத்த ஊடகத்தையும் அவரது குடும்பத்தின் கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

பராசக்திக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதிய காலத்திலிருந்து திரைப்படத்திற்கும், ஊடகத்திற்குமான அவரது தொடர்பினுடைய நீட்சி, இன்றைக்கு கலாநிதி, தயாநிதி, உதயநிதி என்று பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் கலைஞர், ஓடினாலும் ஓடா விட்டாலும் சளைக்காமல் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஏனெறால் இந்த பலம் பொருந்திய ஊடகம் நம் கையில் இருக்கிற வரைதான் ஆட்சி அதிகாரம் நம் கையிலிருக்கும் என்ற நுட்பத்தை அவர் புரிந்து வைத்திருப்பதனால், தொடர்ந்து அதில் தன்னை தக்க வைத்துக் கொள்கிறார்.

இத்தகைய ஊடகத்தில் இன்றைக்கு நமது நிலை என்ன? நம்மிடம் தொலைக்காட்சி இருக்கிறதா; பத்திரிகை இருக்கிறதா; வானொலி இருக்கிறதா; சினிமாவை நல்ல கருத்துக்களைச் சொல்லும் களமாக நாம் பயன் படுத்துகிறோமா? இன்றைக்கு ஈரானியர்கள் தங்களின் போராட்டத்திற்கான கருவியாக சினிமாவை மாற்றி இருக்கிறார்கள். அதன் மூலம் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். அமெரிக்காவிலும், கனடாவிலும், பெர்லினிலும், இலங்கையிலும், மும்பையிலும், கேரளாவிலும் என ஈரானிய சினிமா இன்று உலகம் முழுவதும் சுற்றி வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற உலகப் பட விழாவில் ஈரானிய சினிமாக்கள் திரையிடப்பட்டன. எங்கோ இருக்கிற ஈரானியர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும் இங்கே இருக்கிற கேரள மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வழியமைத்தது சினிமா. இது தான் அந்த ஊடகத்திற்கேயான தனிப்பெரும் பலம். அந்த சினிமாவை நமக்கான கருவியாக மாற்றுவது பற்றி இதுவரை நாம் சிந்திக்கவில்லை.

தினமலர் பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன் நபிகளாரைப் பற்றி ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டது. நபிகளாரைப் பற்றி சித்திரம் வரையக் கூடாது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் தினமலர் அவ்வாறு செய்தது என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் தெரிந்தே நம்மை சீண்டுகிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கையில் ஊடக அதிகாரம் இருப்பதனால் அவர்கள் அப்படி செயல்படுகிறார்கள். நம் கையில் ஊடகம் இல்லாததனால் நம்மால் தினமலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவே முடிகிறது. அவர்களை அவர்களின் வழியிலேயே எதிர்கொள்வதற்கு நம்மிடம் ஊடக அதிகாரம் இல்லை.

இன்றைக்கு தினத் தந்தி என்கிற மிகப்பெரிய ஊடகம் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?
தினகரன்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தினமணி- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தினமலர்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? தமிழோசை- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? ஆங்கில இதழ்களான ஹிந்துவும், எக்ஸ்பிரஸ்ஸும், டைம்ஸ் ஆப் இந்தியாவும்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? இந்தியா டுடேவும், விகடனும், குமுதமும் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது? இவற்றில் ஏதாவது ஒன்று நம் சமூகத்தின் கையில் இருக்கிறதா?

காலையில் விழித்தவுடன் மூன்று ரூபாயைக் கொடுத்து நாம் வாங்கிப் படிக்கிற பத்திரிகைகளில் என்னென்ன வருகிறதோ, அவற்றை அப்படியே உண்மை என்று நம்புகின்றோம். அந்த அளவுக்கு நம்மிடம் கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வலிமை பெற்ற ஊடகமான பத்திரிகைகளின் முதலாளிகள் யார்; அவர்கள் என்ன சிந்தனை உடையவர்கள்; அவர்களின் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் நமக்கு ஏதாவது தெரியுமா? அவர்களைப் போல நாமும் நமது சிந்தனைகளை விதைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊடகத்தை உருவாக்குவது பற்றி என்றைக்காவது யோசித்தோமா?

இன்றைக்கு தமிழ் நாட்டு முஸ்லிம்களில் பணக்காரர்களே இல்லையா? எல்லோருமே பீடி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறோமா? ஒரு பலம் வாய்ந்த நாளிதழை நடத்துவதற்கு கூட நமக்கு வலிமை இல்லையா? ஒரு உருப்படியான தொலைக்காட்சி நடத்தும் அளவுக்கு கூட நம்மிடம் பணம் இல்லையா? இருக்கிறது; நம்மிடம் பணம் இருக்கிறது; பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே அப்படி பலரும் ஒன்று கூடி பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நம்மால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்றால், நமக்கு ஊடக அலுவலகத்தை தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஊடகத்தை நடத்தும் ஊடகவியலாளர்களை நாம் உருவாக்கவில்லை. ஊடக அலுவலகத்திற்குத் தேவையான தளவாடங்களைத் திரட்டினோமே தவிர, ஊடக அறிவுமிக்க தலைமுறையைத் திரட்டவில்லை. நம்மிடம் ஆளுமைகள் இல்லாததால்; ஆளுமைகளை நாம் உருவாக்காததால்; உருவான சிலரையும் சரியாக அடையாளம் காணாததால் தான் நம்மால் தொலைக்காட்சி நடத்தவோ, பத்திரிகை தொடங்கவோ முடியவில்லை.

ஆளுமைகளை உருவாக்காமல் நிராயுதபாணிகளாக நாம் களத்திற்குப் போவதனால் தான், நாம் மற்றவர்களால் எளிதில் தோற்கடிக்கப் படுகிறோம். நிராயுதபாணிகளாக தேர்தல் களத்திற்குப் போனதனால் தான், கலைஞர் நம்மவர்களைப் பார்த்து 'உனக்கு சீட் இல்லை' என்றார்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், கமலஹாசன் உன்னைப்போல் ஒருவன் என்று படம் எடுத்து, அதில் முஸ்லிம்களை கொடூரமாக சித்தரித்து விட்டு எந்தக் கவலையும் இல்லாமல் இன்றைக்கு அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், தினமலர் நபிகளாரைப் பற்றி கார்டூன் போடுகிறது; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான் அலகாபாத் நீதிபதிகள், சட்டம் படித்த நீதிபதிகள், சட்டத்தை எல்லாம் குப்பையில் எறிந்து விட்டு தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டார்கள்; நிராயுதபாணிகளாக நாம் இருப்பதனால் தான், இவர்களையெல்லாம் பாதுகாக்கிற, இவர்களையெல்லாம் ஊக்கப்படுத்துகிற, இவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கிற வேலையை நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கமே செய்துகொண்டிருக்கிறது.

ஆகவே, நாம் என்றைக்கு நம்முடைய கையில் ஆயுதத்தை எடுக்கிறோமோ; நாம் என்றைக்கு நமது குரலை உயர்த்திப் பேச தொடங்குகிறோமோ; எப்போது நமது பிள்ளைகளுக்கு, சுற்றி நடக்கும் விசயங்களைக் கற்றுக் கொடுத்து, சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் அவர்களை தயார் படுத்துகிறோமோ, அன்றைக்குத்தான் நமக்கான விடியல் பிறக்கும்.

இந்த ஊரில் நாற்பதாயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்றால், குறைந்தது நான்காயிரம் பேரையாவது அறிவு பெற்றவர்களாக உருவாக்க வேண்டும். அறிவு என்றால் வெறும் கல்வி அறிவல்ல. அதை நாற்பதாயிரம் பேருக்கும் நாம் கொடுத்தாக வேண்டும். நான் சொல்வது அரசியல் அறிவு; ஊடக அறிவு; கலை இலக்கிய பண்பாட்டு அறிவு; இவையெல்லாம் சேர்ந்த தொலைநோக்கு அறிவு. அப்படி நாம் உருவாக்குவதின் மூலம் தான் நமது இலக்கை நாம் அடைய முடியும்.

2016 லும் 2020 லும் நாம் அறுவடை செய்துவிட வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். 2050 இல் இந்தப் பள்ளப்பட்டி முஸ்லிம்கள் பலம் வாய்ந்த முஸ்லிம்களாக, எவராலும் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாத முஸ்லிம்களாக, அறிவின் உச்சியில் ஒளி வீசும் முஸ்லிம்களாக மாறுவதற்கு திட்டமிடுங்கள்; உழையுங்கள். இதையே ஊர் தோறும், கிராமம் தோறும் பின்பற்றி கடைபிடித்தால், தமிழக முஸ்லிம்கள் 2050 இல் மறுமலர்ச்சி பெறுவார்கள். ஆர்.எஸ்.எஸ் அப்படித்தான் தொலைநோக்கோடு இயங்கி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

நாம் நமது வழிபாட்டு அம்சங்களுக்காக ஊர் தோறும் உறுதியான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். தொழுகை நடத்துவதற்கும், மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் பள்ளிவாசலையும், மதரசாவையும் எல்லா ஊரிலும் உருவாக்கி வைத்துள்ளோம். சென்னையில் போய் தான் தொழ வேண்டும் என்ற நிலையில் எந்த ஊரும் இல்லை. பெரு நகரங்களில் போய்தான் வழிபாடு செய்யமுடியும் என்ற நிலையில் இன்றைக்கு எந்த முஸ்லிம் கிராமமும் இல்லை. அவரவர் வாழ்கிற பகுதியிலேயே நமது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் உறுதியான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். அவற்றை எப்படி ஒரு ஜமாஅத் நிர்வாகம் செய்கிறதோ அதே ஜமாஅத் இனி ஒரு பள்ளிக் கூடத்தையும் நிர்வாகம் செய்ய வேண்டும்; ஒரு கல்லூரியையும்; ஒரு கணினி மைய்யத்தையும்; ஒரு நூலகத்தையும்; ஒரு தொழில் பயிற்சி மையத்தையும் நிர்வாகம் செய்ய வேண்டும்.

மார்க்க ரீதியாக நாம் காட்டுகிற முனைப்பிலும் ஆர்வத்திலும் ஒரு சிறு பங்கையாவது அரசியல், சமூகப் பாதுகாப்புக்கான வழிகளிலும் நாம் காட்ட வேண்டும். அத்தகைய மக்களாக இறைவன் நம்மை ஆக்கி வைப்பானாக என்று பிராத்தித்து முடிக்கிறேன். நன்றி.

மெயில் அனுப்பியவர்: சகோதரர் ஸாதிக் பின் இஸ்மாயில்

மனிதனின் கண்கள்!!

மனிதனின் கண்கள்!!

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)

என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.

இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.




கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை
வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.


நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே

வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )

Faizur Hadi

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.


‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.


இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.


முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.


ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.


முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.


இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.


சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.


நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.


கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!


நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.


மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.


நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.


- முனைவர் வசந்திதேவி

சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111


Source: http://www.samooganeethi.org/?p=872

வியாழன், பிப்ரவரி 24

கைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்


tumor dees Effects brain Effects of mobile phone on your brains

கைத்தொலைபேசிகளை உபயோகிப்பது மூளையை பாதிக்கும் என்றும், மூளை செல்களை அழிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது தான் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகிறது. நூற்றுக்கணக்கான கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு அழைப்பின் போதும் வெளிப்படும் சிக்னல்கள், மூளையின் இரசாயன மாற்றங்களை 7 சதவீதமாக அதிகமாக்குகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய “மூளை மெட்டாபாலிசம்” கைத்தொலைபேசிகளின் ஆன்டனாவை தலைக்கு அருகிலோ, முகத்திற்கு அருகிலோ படும் படி வைத்தால் உண்டாகிறது. கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை வெளியிடுவதாகவும், அவை மூளை செல்களின் வெப்பத்தை அதிகப்படுத்தவதாகவும் ஏற்கனவே ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

தூங்கும் போது தலைக்கு அருகில் கைத்தொலைபேசிகளை வைத்து தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைத்தொலைபேசி நிறுவனங்களுமே இதைத்தான் பரிந்துரை செய்கின்றன.

Jashakkallah Khair: wwwnathiyalai.blogspot.com/


அப்படியே இதையும் படியுங்களேன்






நாவைப் பேணுக!


குர்ஆனின் நற்போதனைகள்
நாவைப் பேணுக!

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


திங்கள், பிப்ரவரி 21

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்

இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்!.

எத்தனை சீட் முஸ்லிம்களுக்கு?.

அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர்.

முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

எந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை!. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும்.

எப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள்!. இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்!.

காரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை!. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை!.
தேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்!.

எந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா?. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்!.

தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும்!. அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன்!. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி!. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம்! என்ற டயலாக் வந்தாலும் போதும்!. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது!) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்!.

யார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை?. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்!.

முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி, 10 சீட்டு கேட்டவர்களுக்கும் மூன்று மட்டுமே என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை!. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்!.

இதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை!. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது?.

தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லிமை நிறுத்தினால் ஓட்டு!. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது!.

ஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை!.

முஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது!.

சமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை!.

சமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும்.

சமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும் போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

கண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது.

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது.

இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

பழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை உறுப்பினர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.

1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியில் 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.

1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்),1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க), 1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க), 1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க), 2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்).

அதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன்?. இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.


Jashakkallah: http://adiraimujeeb.blogspot.com

தூக்கம்

தூக்கம்

மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வேலை ஆனால் நம்மால் பெரிதாக கவனம் செலுத்தப்படாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை உடலளவிலும்,மனதளவிலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்க உதவுகின்றது.

நம்மில் பலர் நமது வேலைகளை காரணம் காட்டி தூக்கத்தை புறக்கணிப்பது உண்டு. தியாகமில்லாமல் எதுவுமில்லை என்று அதற்கு காரணம் சொல்வதும் உண்டு.ஆனால்

தூக்கமின்மையால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல.

சரியான தூக்கம் இல்லையெனில்,

* நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்பவர்களாக மாறுகின்றீர்கள்.

* நம் வேளைகளில் கவனம் செலுத்துவது சிரமாமாக அமையும்.

* களைப்பாக உணர்வீர்கள்

* தலைவலி உண்டாகும்

* மேலும் பொதுவாகவே நீங்கள் நோய்வாய் பட்டதை போல் உணர்வீர்கள்.

இது உங்களை நீங்கள் எந்த வேலைக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்தீர்களோ, அந்த வேலையில் சரியாக செயல்பட முடியாதவராக மாற்றிவிடும்.

இரவில் சரியான தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும்,அழகாகவும் மாற்றுகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வினை சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 18 முதல் 31 வயது நிரம்பிய 23 ஆண் மற்றும் பெண்களிடம் சோதித்தனர்.

இவர்களை முதலில் 8 மணி நேரம் தூங்க செய்து அவர்களை புகைப்படம் எடுத்தார்கள். பின்னர், அவர்களை இரவில் 5 மணி நேரம் தூங்க செய்து 31 மணி நேரம் விழித்திருக்கச் செய்தனர்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பங்கேற்பாளர்கள் படமெடுக்கப்பட்டனர்.

இந்த புகைப்படங்களை கலவை செய்து 65 நபர்களிடம் பங்கேற்பாளர்களுடைய தோற்றம், ஆரோக்கியம் மற்றும் களைப்பு ஆகியவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் நன்றாக தூங்காத புகைபடங்களுக்கு 19% அதிக களைப்பாகவும், 6% ஆரோக்கியமின்மையாகவும் 4% அழகிய தோற்றம் இல்லாமலும் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

தூக்கம் என்பது விலை மலிவான சிறந்த அழகு சாதனம் என்று Karolinska Institute ஐ சேர்ந்த பேராசிரியர் John Axelsson தெரிவிக்கிறார்.மேற்கூறப்பட்ட ஆய்வினை நடத்தியது இவரே.

தூக்கமின்மை நாம் கண்களை நன்றாக திறக்காமல் செய்கின்றது. மேலும் முகத்தின் தசைகளை சோர்வடைய செய்கின்றது. படுக்கையின் போது நமது முகத்திர்க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.

மேலும் தூக்கத்தின் போது நமது உடல் அதிக (மனித வளர்ச்சி) ஹார்மோன்களை சுறக்கின்றது.

இந்த ஹார்மோன்கள் நமது உடலின் குறைபாடுகளை சரிச்செய்ய பெரிதும் உதவுகின்றது.

நல்ல உணவோடு சிறிது உடற்பயிர்ச்சியும் சரியான அளவு தூக்கமும் நம்மை மனதளவிலும்,உடலளவிலும் நமது வேலைகளுக்காக தயார் படுத்தும்.

http://www.thapalpetti.tk/

வெள்ளி, பிப்ரவரி 18

மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்.

மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்.


எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.
மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை:
தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு...
* நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.
* நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
* நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
* நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.
* நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும்.
* வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
சில எளிய நீச்சல் பயிற்சிகள்:
மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ!
1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும்.
2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.
3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.
http://wwwnathiyalai.blogspot.com/