Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, டிசம்பர் 17

இறைத்தூதர்கள்

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

1.ஆதம் (அலை):
உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.

2.இத்ரீஸ்(அலை):
இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.

3.நூஹ்(அலை):
ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.

4.ஹூத்(அலை):
கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.

5.ஸாலிஹ் (அலை):
இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த "ஸமூத்"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.

6.இப்றாஹீம்(அலை):
இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள "உர்"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு "இறை நம்பிக்கையாளர்களின் தந்தை" எனவும்,"இறைவனின் உற்ற நண்பர்" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.

7.லூத் (அலை):
நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள "ஸத்தூம்"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.

8.இஸ்மாயீல்(அலை):
கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் "அரபிகளின் தந்தை" என்பர்.

9.இஸ்ஹாக்(அலை):
இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை "இஸ்ராயீல்களின் தந்தை"என்று சொல்வர்.

10.யஃகூப்(அலை):
கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.

11.யூசுப்(அலை):
யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.

12.ஐயூப்(அலை):
நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் "அல் அகபா"வளைகுடாவுக்கும் மத்தியில் "அத்வம்"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்.

13.ஸுஐபு(அலை):
இவர்கள் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தொன்றல்.வடமேற்கு சவூதியாவில் உள்ள மலைபிரதேசமான "மத்யன்"பகுதிக்கும்"அய்கா"என்னும் மற்றுமொரு பகுதிக்கும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரிறைக் கொள்கையையும்,வணிகநேர்மையையும் மக்களுக்கு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

14.மூஸா(அலை)
இவர்கள் கி.மு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தனர்.கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ்(பிர் அவ்ன்)கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயீல் சமுதாயத்தை மீட்டார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் "தவ்ராத்" வேதத்தை அருளினான்.

15.ஹாரூன் (அலை):
இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் சகோதரர்.எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ரம்சேஸை எதிர்த்துப் போரடுவதில் மூஸா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

16.இல்யாஸ்(அலை):
கி மு 8ஆம் நூற்றாண்டு நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத்தூதர்.அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

17.யூனுஸ்(அலை):
கி.மு 8ஆம் நூற்றாண்டில் ,இராக்கிலுள்ள "நைனவா" பகுதிக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

18.தாவூத்(அலை):
இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.இவர்களுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை அல்லாஹ் அருளினான்.இவர்கள் பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜாலூதை வீழ்த்தினார்கள்.

19.சுலைமான்(அலை):
இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் மைந்தரான இவர்கள் இறைத்தூதராகவும்,பேரரசராகவும்,விளங்கினார்கள்.ஜெரூசலத்திலுள்ள புனித இறை இல்லமான பைத்துல் முகத்தஸை இறைக்கட்டளைக்கு இணங்க புதுப்பித்தார்கள்.ஜின் இனமும்,பறவை இனமும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.

20.ஜகரிய்யா(அலை):
கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களின் வழித்தோன்றலான இவர்கள் அன்னை மர்யமை வளர்த்தார்கள்.இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள் இவர்களின் புதல்வர் ஆவார்கள்.

21.யஹ்யா(அலை):
கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஜக்கரிய்யா(அலை) அவர்களின் புதல்வர்.இவரை இஸ்ரவேலர்கள் படுகொலை செய்தனர்.

22.ஈஸா(அலை):
இவர் கி.மு 4ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாஸிரா என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள்.இவருக்கு இஞ்ஜீல் வேதம் இறைவனால் அருளப்பட்டது.

23.துல்கிஃப்லு(அலை):இறைத்தூதர்.

24.அல்யஸவு(அலை): இறைத்தூதர்.

25.முஹம்மது(ஸல்): இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12(கி.பி 570 ஆகஸ்ட் 20) திங்கள்கிழமை மக்காவில் பிறந்தார்கள்.இப்புவியில் 63ஆண்டு காலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் (கி.பி 632 ஜூன் 7)திங்கள் கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.

Source; http://allaaahuakbar.blogspot.com/