Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

ஞாயிறு, அக்டோபர் 9

இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.

இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.
இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கைக்கான முழு சோதனை வருகிற 12ம் திகதி நடைபெறுகிறது.மக்கள் வெளியேற்றம் உட்பட இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் இதில் இடம்பெறுகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 9.2 புள்ளிகளாக பதிவான அதனால், சுனாமி பேரலைகள் எழுந்து இந்தியா உட்பட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கின. நிலநடுக்கம் ஏற்பட்டு 12 மணி நேரத்துக்கு பிறகு கடைசியாக தென் ஆப்ரிக்க கடலோரத்தில் சுனாமி தாக்கியது.இந்த இயற்கை சீற்றத்துக்கு 2.3 லட்சம் பேர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் காணாமல் போயினர். இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரள கடலோரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இதையடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை நடைமுறை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ நடவடிக்கை எடுத்தது. 2005ம் ஆண்டு இதற்கான இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.அதன் பிறகு நிலநடுக்கம் ஏற்படும்போதெல்லாம் ஜப்பான் புவியியல் மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பின் மூலம் 28 நாடுகளுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

2012ம் ஆண்டு வரை அது தொடரும் என்ற போதிலும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு தனி சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான சோதனை வருகிற 12ம் திகதி நடக்கிறது.அதில் இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க உறுதி அளித்துள்ளன. அதன்படி போலியான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு கடலோர பகுதி மக்கள் மீட்பு மற்றும் சுனாமி நிர்வாகம் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

12ம் திகதி சோதனையில் பங்கேற்க இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், காமரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர், ஏமன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

2 comments:

Mohamed Faaique சொன்னது…

//இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரள கடலோரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.///

அதாவது பரவல்லீங்க.. நம்ம நாட்டுல 120 000 பேரு...

Jafarullah Ismail சொன்னது…

Mohamed Faaique கூறியது...
//இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரள கடலோரங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.///

அதாவது பரவல்லீங்க.. நம்ம நாட்டுல 120 000 பேரு...

ஆமாம் சகோ. இலங்கையில்தான் பாதிப்பு அதிகம்.