Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், செப்டம்பர் 17

ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...?

 ஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...? 

இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட, துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட கொள்கலனில் செயற்கை கதிர்வீச்சு பதார்த்தங்கள் இருப்பது கொழும்பு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

125 தொகுதி துருப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி பொருட்கள் கொண்ட இக்கொள்கலனில் கோபால்; -60 எனும் மிக ஆபத்தான செயற்கை கதிர்வீச்சு பதார்த்தம் காணப்பட்டதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின்தலைவர் கலாநதி ஆர்.எல். விஜேவர்தன, டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.



இது தொடர்பாக சபையின் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்பின் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதை நிறுத்திவைப்பதற்கு தீர்மானித்தாக அவர் கூறினார். 

"மேற்படி இந்திய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாம் இன்னும் ஆராயவில்லை. ஆனால் அப்பொருட்களை இந்தியாவுககு திருப்பி அனுப்புவதற்கும் இந்திய அணுசக்தி ஆணைக்குழு மற்றும் சரவ்தேச அணுசக்தி முகவரகம் ஆகியவற்றுக்கு இப்பொருட்கள் குறித்து அறிவிப்பதற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்தை அறிவுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என கலாநிதி விஜேவர்தன கூறினார்.http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48679-2012-09-15-09-31-56.html

ஜப்பான் அணு உலை வெடிப்பில்  மீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்ட அத்தனை வாகனங்களையும்  ராணுவ ஊர்திகளையும் எடைக்கு கூட போடாமல் ஒதுக்கி வைத்து விட்டது.... சிந்திப்போமா ?
கல்பாக்கம் பகுதி மீனவர்களுக்கு  என்னென்ன புதுபுது வியாதிகள் வந்துள்ளது என்று அறிந்து கொள்ள முற்பட்டால்
நிச்சயம் சொல்வீர்கள்
அணு உலை வேண்டாம் என்று