Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 13

வறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா

சமீப காலமாக முகநூலில்சோமாலிய இப்தார் படம் ...
சோமாலியரின் கேள்விக்கு அழுத தொலைகாட்சி நிகழ்ச்சி ...
 மீடியா அவ்வப்போது உமிழும் சோமாலிய கடற்கொள்ளை.... சோமாலியாவின் உண்மை முகம்தான் என்ன?
அந்த வறுமையின் வரலாறு தான் என்ன ?

 ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.

 நபிகளின் தோழர்களுக்கு நாடு கொடுத்த நஜ்ஜாசியின் பிரதேசம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதாவது (கி மு 3000 ) இந்த பகுதி மிக முக்கியமான வியாபார கேந்திரமாக பல பகுதிகளுக்கு இருந்துள்ளது . அப்போதைய பேரரசுகள் இந்த பகுதியுடன் வியாபார தொடர்பை கொண்டிருந்தன.
அரேபிய பகுதிகளிலும் இவர்களது வணிகதொடர்பு நெருக்கமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது.
       முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் பகிரங்க பிரசாரத்தை ஆரம்பித்த உடன் அப்போதைய மக்கத்து குரைஷிகள் எண்ணற்ற தொல்லைகள் கொடுக்க நபி அவர்களுக்கு தான் கஷ்டபட்டாலும் தனது தொண்டர்கள் கஷ்டப்பட கூடாது என சிறந்த தலைமை பண்பின் வெளிப்பாடாய் முத்ல் ஹிஜரத் செய்ய அனுமதிக்கிறார்கள் ..
                                அதற்கு முன்பே அதற்கான சாதகமான இடத்தை தேர்வு செய்து அபிசீனியா அதாவது இன்றைய சோமாலியா உள்ளடக்கிய பகுதிக்கு அனுப்புகிறார்கள் ..
           அங்கே நஜ்ஜாசி எனும் மன்னர் ஆட்சி செய்கிறார் ...
அங்கு புகலிடத்தை கண்டார்கள்.
இன்னொரு குழுவும் மக்காவிலிருந்து அபிசீநியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொள்கிறது .
        மக்கத்து குறைஷிகள் நஜ்ஜாசி மன்னரிடம் மிகுந்த வியாபார தொடர்பு உடையவர்கள் என்ற சிறப்பு அந்தஸ்தின் காரணமாக முஸ்லிம்களை திருப்பி அனுப்பிவிட கோரிக்கை வைக்கபடுகின்றது.
ஆனால் விசாரித்து நீதமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் தனது நாட்டில் கண்ணியத்துடன் தங்க அனுமதித்தார்.
( இங்கே அகதிகள் முகாம் அமைக்க வில்லை ... எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவே அனுமதித்திருக்கிறார் .. மத சுதந்திரம் உட்பட ..)

இஸ்லாமிய வரலாற்றில் ஹபச எனும் பெயர்பெற்ற இப்பகுதிக்கு கலிபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் முழுமையாக சென்றடைந்தது .

என்ன வளம் இல்லை அந்த திருநாட்டில் ....

   சோமாலியா மிகபெரும் கடற்கரையை கொண்டுள்ள நாடு ..
மிக முக்கிய இயற்கை வணிகமாக மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்ற நாடாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் சமீபகாலமாக வறுமைக்கு எடுத்துகாட்டு சொல்லும் நாடாக மாற்ற பட்டிருக்கின்றது .
   உலகின் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடாக மட்டுமல்லாது தகரம் மற்றும் யுரேனியம் ஆம் இன்று உலகை ஆட்டிபடைக்கும் அணுகுண்டின் அடிப்படையான யுறேனியமும் சோமாலியாவில் அதிகமாகவே கிடைக்கின்றது ...
அப்புறம் என்ன எண்ணெய் உண்டு
யுறேனியமும் உண்டு
விடுவார்களா ..?
உலக நாட்டான்மைகள் .....இருந்தும் ஏன் வறுமை ...?

                                                       ........   இறைவன் நாடினால் அலசுவோம் ......