Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், அக்டோபர் 30

புயல் எச்சரிக்கை கூண்டுகள் ...

மழைகாலங்களில்  தொலைகாட்சிகளில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு ரமணன் அவர்களை அடிக்கடி பார்க்கின்றோம் ....
அவர் வழக்கமாக காற்றழுத்த  தாழ்வு நிலை ... மண்டலம் ..... இப்படி அடிக்கடி சொல்வார் .
செய்திகளிலோ புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற பட்டது என்றும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு எண் சொல்கிறார்கள் அல்லவா ? அதன் விளக்கம் தான் என்ன ?
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களையும் பார்க்கலாம்
:
ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
2 ம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
3 ம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
4ம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.
5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.
10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.
தொலை தொடர்பு வசதிகள் பற்றிய அறிவு மக்களுக்கு இல்லாத காலத்திலேயே வழிகாட்ட கலங்கரை விளக்கமும் ...எச்சரிக்கை கூண்டுகளையும் வைத்தே மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள் .

4 comments:

உங்களில் ஒருவன் சொன்னது…

தகவலுக்கு நன்றிகள் பல, ஆனால் சாதாரண பாமர மீனவனுக்கு இது தெரியுமா?

திருபுவனம் வலை தளம் சொன்னது…

கண்டிப்பாக தெரியும் ...
இது கடலில் பயணிப்போர் ,மீனவர்கள் ஆகியோருக்கான தகவல் தான்
கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவர்களுக்கும் இது அறிந்த விசயம் தான்

nallooran சொன்னது…

"புயல் எச்சரிக்கை கூண்டுகள் ..."


english la enna?

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

பதிவு தொடர வாழ்த்துகள்...

புயல் எச்சரிக்கை விடுத்தாலும் பெரும்பாலான பொதுமக்களுக்கு தகவல் தெரிவதில்லை !?