Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், ஆகஸ்ட் 20

உயிரை குடித்தது மெஹந்தி யா ? வதந்தி யா ?

இன்று தமிழக முஸ்லிம்கள் ரம்ஜான் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி கொண்டு இருந்த வேளையில்
தமிழகத்து முஸ்லிம் பெண்கள் மருதாணி இட்டு தங்களை அழகுபடுத்தி கொண்டிருந்த அந்த வேளையில்
 நேற்று நள்ளிரவில் திடீர் என ஒரு வதந்தி....

எல்லாமே பாக்கெட் என மாறிப்போன இந்த நேரமில்லா...? காலத்தில்..
மெஹந்தி என கோன் வடிவில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் மருதாணி ரக சாயபூச்சு திரவத்தை உபயோகித்த பெண்கள்,
கையில் அரிப்பு ஏற்பட்டு கொத்து கொத்தாக பலி யாகி வருவதாக வதந்தி இரவு நேரத்திலும் மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது .

 வாழ்த்து செய்தி வரும் முன்  மெஹந்தி செய்தி  வதந்தியாகா வேகமாய் பரவ செல்போன்கள் அலற ஆரம்பித்தன

பெரிய ஊர்களில் எல்லாம் நள்ளிரவிலும் பள்ளிவாசல் மைக் குகளை போட்டு அவசர அறிவிப்புகளை அறிவித்தனர்

இதில் முதலுதவியாக கையை வெண்ணீரில் கழுவி, தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்

மார்க்க விசயங்களில் அதிகம் அறிவுடையோர் கூட இதை ஆராய முற்படவில்லை .

 கையில் தடவும் மருதானியால் அலர்ஜி ஏற்படுமே தவிர
உயிரா போகும் ..?

இதனால் பீதியடைந்த மக்கள் இரவு நேரத்தில் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைகளை நோக்கி ஓடியது ..அட கடவுளே !

இந்த நேரத்தில் ஒரு ஆறுதல்......

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின்
மாநில செயலாளர் அன்சாரி எனும் அன்பர்
சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று
விசாரித்து இது வெறும் வதந்தி தான் என அறிவிப்பை செய்தார்.
அதன் பின்னரே கொஞ்சம் இயல்பு நிலை திரும்பியது

இதற்கு முன்  சொட்டுமருந்து போட்ட குழந்தைகள் பலி என வதந்தி கிளம்பியது நினைவிருக்கலாம்  .

தான் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புகின்ற்வன் பொய்யன் -இது நபிமொழிதீயவன் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதை ஆராய வேண்டும் எனவும் கட்டளை இடுகின்றது இஸ்லாம்சரியான நேரத்தில் சரியான செயலை செய்த அன்பு சகோதர் அன்சாரி அவர்களுக்கு அல்லாஹ் நன்மைகளை அள்ளி தருவானாக.