Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 29

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்

கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்
கட்டுமானப் பணி : அதிகாரி ஆய்வு

தஞ்சை மாவட்டம், நீலத்தநல்லூரையும், அரியலூர் மாவட்டம், மதனத்தூரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 36.5 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

நீலத்தநல்லூரையும், மதனத்தூரையும் இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டித் தரவேண்டும் என சுமார் 50 ஆண்டுகளாக அரசுக்கு இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இப் பாலத்துக்கு அரசு அனுமதியளித்தது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 36.5 கோடியில் பால கட்டுமானப் பணிகள் தொடங்கின.

முதல் கட்டமாக பூமிக்கடியிலிருந்து 22 அடி உயரத்திற்கு தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

55 தூண்கள் எழுப்ப திட்டமிடப்பட்டு, இதுவரை 28 தூண்கள் முழுமையாக தஞ்சை மாவட்ட எல்லையில் எழுப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில் பால கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) தலைமைப் பொறியாளர் ராஜாமணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி செய்தி

[அணைக்கரை கொள்ளிடம் பாலம் பழுதடைந்துவிட்டதால் கணரக வாகணங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது தாங்கள் அறிந்த செய்தி]