
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்குவதற்கான அபாயம் 4 மடங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இருதய நோய் தலைநகராக இந்தியா உருவெடுத்து வருகிறது.
நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப் பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
நன்றி: பாலைவனத் தூது
2 comments:
அப்படியா, தகவலுக்கு நன்றி சகோதரா.
சகோதரர் அரபுத்தமிழனே! வந்ததற்கும் வருவதற்கும் நன்றிகள்.
கருத்துரையிடுக