Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

திங்கள், நவம்பர் 29

இழுக்க இழுக்க இன்பமா?


அடுத்தவர் 'இழுத்தாலே' ஆறுலட்சம் என்றால், 'இழுப்பவரின்' நிலை..?
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது. இதனால் இதயநோய்கள், புற்று நோய் போன்றவை ஏற்படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும், பலவித நோய்களால் பாதிக் கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.
சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாச நோயினால் பாதிக்கப்படு கின்றனர். அவ்வாறு பாதிக் கப்படுபவர்கள் குறித்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
\
சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது.

காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


நன்றி; மாலைமலர்

2 comments:

KANA VARO சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Jafarullah Ismail சொன்னது…

அன்புச்சகோதரர் வரதய்யன் கனகநாயகம் அவர்களே,வருகைக்கு நன்றி