Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஜனவரி 7

இட்லி சாப்பிடுங்கள்

இட்லி சாப்பிடுங்கள்

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற
வைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில்
இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது
மிகச் சிறந்த சத்துணவு என்று 2001 வருட
ஜப்பானிய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அரிசியிலும் உளுந்திலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக வேலை செய்கின்றன. அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களைப் பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுஃரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடும் கொண்டைக்கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் இட்லி, தோசை முதலியவற்றில் இருக்கின்றன. லைசின் அமினோ அமிலமும் பசி ஏற்பட¡மல் பார்த்துக்கொள்கிறது. இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத்திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை முதலியவற்றைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி உள்ள முருங்கைக் கீரை பச்சடி, முருங்கைக் காய் சாம்பார் நல்லது.

அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா, கொத்தமல்லி போன்ற துவையலோடு சாப்பிடுவது சிறப்பு. லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் 'சி' தான். அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.

எனவே இட்லி, தோசை மிகவும் தரம் வாய்ந்த உணவுகள் என்பதை உணர்வோம்.