Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஜூலை 29

குவைத்தில் தமிழில் வெள்ளிமேடை


குவைத்தில் தமிழில்வெள்ளிமேடை

குவைத்தில் தமிழ்பள்ளி முன்பே நடைபெற்று வருகிறது என்றாலும் கூட
எங்களது பகுதிகளில் (ஃபர்வானியா கெய்தான்) தமிழில் ஜும்ஆ என்பதுபலநாள் கனவாகவே இருந்துவிடுமோ என்ற கவலை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. காரணம் மலையாளம்,உருது என்று கிடைத்த பள்ளிகளில் அவரவர்கள் பயான் ஹதீஸ் என்று கலக்கிக்கொண்டு இருக்கதமிழ்முஸ்லிம்கள் மட்டும் நமக்கே உள்ள இயக்க வேறுபாடுகளால் தொழுகை முடிந்ததும் பள்ளிகளில்ஒவ்வொரு மூலைகளிலும் தங்கள்தங்கள் வாய்வரிசைகளை காட்டிவந்தனர்

இந்நிலையில்KTIC அமைப்பு கெய்தான் பகுதியில் ஒரு பள்ளியை(கிரவுன் பிளாசா ஹோட்டல் எதிரில்) குவைத்அரசிடம் அனுமதி பெற்று
இன்று 29-07-2011ஜும்ஆ தொழுகையை தமிழில் உரை நிகழ்த்தி மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்……

இது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை!

இம்முயற்சிக்குநீண்ட நாட்களாக முழுமூச்சாய் செயல்பட்ட KTIC சகோதரர் கலீல் பாகவி.சகோ.முஹம்மதுமீராஷாபாஜில்பாகவி,சகோ.ஜெய்னுல்ஆபிதின் பாகவி, சகோ.நிஜாமுத்தின் பாகவி,சகோ.A.K.S.அப்துல்நாசர்,சகோ.Hமுஹம்மது நாசர், சகோ. M.ஜாஹிர் ஹுஸைன் மற்றும் பெயர் தெரியாத KTIC சகோதரர்களும்பாராட்டுக்குரியவர்கள்.

இனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.

4 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மிக்க நல்லதொரு செய்தியை சொன்னீர்கள் சகோ.ஜபருல்லாஹ்.

இங்கே சவூதி ஜுபைலிலும் கூட ஒரு தமிழ் ஜும்மா பயான் பள்ளி ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளது. இதற்கு இலங்கை தமிழர்களின் முயற்சி மிக அதிகம்.

//அல்ஹம்துலில்லாஹ்……
இது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை!//
---மாஷாஅல்லாஹ்.

//இனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.//--ஆமீன்..!

பாரக்கலாஹ் ஃபீஹி.

Jafarullah Ismail சொன்னது…

சகோ.முஹம்மத் ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

பொதுவாக இஸ்லாமியர்களை ஒன்று கூட்டுவது என்பது சாதாரணம் அல்ல.
அப்படி தானாக கூடும் ஒரே நிகழ்வு ஜும்ஆ மட்டும் தான். அதைக்கூட நமது சகோதரர்கள் சரியான முறையில் பயன்படுத்தாது நெருடலான விசயம்.

எத்தனை சகோதரர்கள் அரபுநாடுகளில் பல்லாண்டுகளாக இருந்தும்கூட மார்க்க அடிப்படை விசயங்களையும் அறியாதவர்களாக இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் இந்த பதிவு.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.

வாஞ்சையுடன் வாஞ்சூர் சொன்னது…

உங்களுக்கே தொழுகை .உங்களுக்கே தொழுகை. உங்களுக்கே தொழுகை.

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


வாஞ்சையுடன் வாஞ்சூர்.
.

Jafarullah Ismail சொன்னது…

@ வாஞ்சையுடன் வாஞ்சூர் கூறியது...
தொழுகையைப்பற்றி மிக சிறப்பான தங்களின் விளக்கத்திற்கு நன்றி!

2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

பதிவுலகின் முன்னோடி பதிவர் தாங்கள்,
தங்களுக்கு எனது ஸலாம்!!