Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, அக்டோபர் 30

கேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் பதிலடியாக மாறிய எஸ்.டி.பி.ஐயின் முன்னேற்றம்

கொச்சி,அக்.30:முவாற்றுப்புழா என்ற இடத்தில் நபி(ஸல்...) அவர்களை கேவலமாக விமர்சித்து வினாத்தாள் தயாரித்த நியூமென் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கைவெட்டிய வழக்குத் தொடர்புப்படுத்தி ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் மற்றும் சங்க்பரிவார்களும் நடத்திய பொய்ப் பிரச்சாரம், போலீஸ் நடத்திய முஸ்லிம் வேட்டை ஆகியவற்றிற்கு எதிராக கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர் கேரள வாக்காளர்கள்.

மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நபிகளாரை அவமதித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புப்படுத்தி அதிகமான முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடி, சிறையிலடைத்த எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்ற வார்டுகளில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் கைவெட்டு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அனஸ் வாழைக்குளம் ப்ளாக்கில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்கவோ, வாக்களிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் 3992 வாக்குகளைப் பெற்று 1902 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப் பெற்றார். அனஸ் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ இரண்டாவது இடத்தைப் பிடித்த பல பஞ்சாயத்து வார்டுகளிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நபிகளாரை அவமதித்த வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர் ஜோசப் பணியாற்றிய நியூமென் கல்லூரி அமைந்துள்ள கீரிக்கோடு வார்டில் 310 வாக்குகளைப் பெற்று எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் ஆசிரியை சுபைதா வெற்றிப் பெற்றார். இவ்வார்டிலும் இடதுசாரிக் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்திய கேரளாவில் எஸ்.டி.பி.ஐ யினால் ஈர்க்கப்படுவதை கவலையோடு காண்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை. பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் எஸ்.டி.பி.ஐயை ஒடுக்கிவிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது.

பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்களை விட எஸ்.டி.பி.ஐயின் அலுவலகங்கள் அதிகமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் பி.கோபிநாத்தின் திருப்புணித்துரா என்ற இடத்திலிலுள்ள வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர். கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான பி.பி.மைதீன் குஞ்சினை இவ்வழக்கில் குற்றவாளியாக இணைத்ததும் கட்சியின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கத்திலாகும்.

பகிரங்கமாகவே எர்ணாகுளம் நகரின் மத்தியில் பாலாரிவட்டம் போலீஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வியாபாரபவன் என்ற ஆடிட்டோரியத்தில் எஸ்.டி.பி.ஐ நடத்திய மத்திய மண்டல தலைவர்களின் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்த போலீசார் நிகழ்ச்சியை அலங்கோலப்படுத்த முயன்றனர்.

எஸ்.டி.பி.ஐ வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பல இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் கூட வாக்குகளை அளிக்கச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகிய எதிர்மறையான கட்சிகள் ஒன்றினைந்த விசித்திர சம்பவங்களும் பல வார்டுகளில் அரங்கேறியது.

பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்ட முவாற்றுப்புழாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஜனகீய முன்னணி என்ற கட்சியின் முக்கிய பிரச்சார ஆயுதமே பேராசிரியரின் கைவெட்டு சம்பவமாகும்.
திருவனந்தபுரம்,அக்.30:கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து வார்டுகளில் இரண்டாவது இடத்தையும், 47 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட 114 வார்டுகளில் 63 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தது எஸ்.டி.பி.ஐ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்ட 22 வார்டுகளில் பன்னிரெண்டு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரு கூட்டணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக திகழ்ந்தது.

மாவட்ட பஞ்சாயத்திற்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ பெண் வேட்பாளர் நாஃபிலா 1362 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட ஐந்து ப்ளாக் டிவிசனில் நான்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க இடதுசாரி-வலதுசாரி முன்னணிகள் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து விசித்திரமான கூட்டணியை உருவாக்கியதால் எஸ்.டி.பி.ஐ தோல்வியுறக் காரணமானது என எஸ்.டி.பி.ஐ தலைவர் எ.இப்ராஹீம் குட்டி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க சி.பி.எம்-காங்கிரஸ், சி.பி.எம்-பா.ஜ.க, காங்கிரஸ்-பா.ஜ.க என்ற விசித்திரமான கூட்டணி உருவானது. எஸ்.டி.பி.ஐ தோற்கடிக்க ஜமாஅத்தே இஸ்லாமியும் பல இடங்களில் இதரக் கூட்டணிகளுடன் சேர்ந்ததாகவும் இப்ராஹீம் குட்டி தெரிவித்தார்.

கொல்லம், கண்ணூர், காஸர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நிர்ணாயக சக்தியாக விளங்கியுள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

7 comments:

பெயரில்லா சொன்னது…

sdpi jindabaath

பெயரில்லா சொன்னது…

weldone sdpi

அபு ரஜின் சொன்னது…

முஸ்லிம்கள் அரசியலில் சக்தி பெற கொடாது என்ற எண்ணம் பாஸிச சங்பரிவாரதிற்கு மட்டுமல்ல அணைத்து அரசியல் கட்சிகளுக்குமே உள்ளது என்பது கேரளாவில் இதன்மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது
ஜமா அதே இஸ்லாமியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது

திருபுவனம் வலை தளம் சொன்னது…

நன்றி

தமிழன்பு சொன்னது…

எஸ் டி பி ஐ வெற்றி வரலாற்றின் புதிய அத்தியாத்தை இனி முஸ்லிம்கள் துவங்கிவிட்டனர் என்பதற்கான அடையாளமே
வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

மாற்று அரசியல் என்று சொல்லி களம் கண்டுள்ளார்கள்
இவர்கள் எப்படி என்பதை பொறுத்துஇருந்து பார்ப்போம்

தவ்ஹீத் நேசன் சொன்னது…

இவனுங்க மட்டும் என்ன புதுசா மாற்றம் கொண்டு வர போறானுங்க?
எல்லாம் ஒரே குட்டோயில் ஊறிய மட்டைகல்தான்