Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், ஏப்ரல் 14

இஸ்லாத்தின் பெயரால் சமாதி வழிபாட்டுத் திருவிழாக்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன

இஸ்லாத்தின் பெயரால் சமாதி வழிபாட்டுத் திருவிழாக்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன

இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது என்று உளமாற நம்புகின்றனர்.

இந்த நிலையில் பூர்வீக முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடியவர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான இறைக் கோட்பாட்டைத் தகர்க்கும் விதத்தில் ஊருக்குஊர் சமாதிகளைக் கட்டி வைத்து அதற்கு வருடா வருடம் திருவிழாக்கள் நடத்துகின்றனர். சமாதியில் உள்ளவருக்கு எல்லாவிதமான ஆற்றலும் இருப்பதாக நம்புகின்றனர். அவர்களிடத்தில் தங்கள் முறையீடுகளை வைக்கின்றனர். சமாதிகளை மாலை போட்டு மரியாதை செய்கின்றனர் சந்தனம் பூசி மகிழ்கின்றனர். சமாதிகளுக்கு விளக்கேற்றி மரியாதை செய்கின்றனர். சமாதி விழாக்களில் யானைகளையும், கழுதைகளையும் கொண்டு வந்து தெருக்களில் ஊர்வலம் வருகின்றனர். சமாதிகளை சுற்றியிருந்து மவ்லூது என்ற பாடல்களைப் பாடி சமாதியில் உள்ளவரிடம் இறைஞ்சி முறையிடுகின்றனர்.

சமாதியில் நின்று அழுது புலம்புகின்றனர். சமாதியிலே உண்டியல் வைத்து காணிக்கைகள் போடுகின்றனர். ஊரெல்லாம் வசூல் செய்து சோற்றை சமைத்து பாழ்பட்ட பல கைகளால் பிசைந்து பரகத் என்ற பெயரில் பங்கீடு செய்கின்றனர். இதை புண்ணியம் என நினைத்து மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

சமுதாய மக்களே! ஈமாந்தாரிகளே! கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்,

ஊருக்கு ஊர் சமாதிகள், தக்கலையிலே பீரப்பா, கோட்டாறில் பாவாகாசீம் அப்பா, திட்டுவிளையில் ஹயாத் அப்பா, திருவிதாங்கோட்டில் மலுக் அப்பா,.... இப்படியே அப்பாக்களின் பெயரில் நடத்தப்படுகின்ற திருவிழாக்களில் அரங்கேறுகின்ற காட்சிகள், கோவில்களில் சாமி சிலைகளுக்கு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளிலிருந்து கடுகளவும் வேறுபடாத விதத்தில் அனைத்தையும் அப்படியே சமாதிகளில் பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்து கொண்டு, இதுவும் இஸ்லாம் என்று பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

சாமி வழிபாட்டுக்காரர்களுக்கும், சமாதி வழிபாட்டுக் காரர்களுக்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கிறது ஒரு வேறுபாடுமில்லை. தேசிய ஒருமைப்பாட்டில் இவர்களும் அவர்களோடு இரண்டரக் கலந்துவிட்டார்கள்.எனவே அவர்களுக்கு என்ன தீர்ப்பை அல்லாஹ் வழங்குவானோ அதேத் தீர்ப்பை தான் இவர்களுக்கும் வழங்குவான். இவற்றை யார் செய்தாலும் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்களே, இதற்கு செலவிடப்படும் பணம் நரகிற்கு கொண்டு செல்லும்.

எனவே நரகப்படு குழியை நோக்கி இந்த சமுதாயம் செல்ல நினைக்கின்றதா?

அல்லாஹ்வால் இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கருதுகிறார்களா? என்றென்றும் உயிரோடு இருக்கின்ற அல்லாஹ்விடம் முறையிடுவதை விட்டுவிட்டு உயிரற்ற கல்லிடமும் மண்ணிடமும் முறையிடுகிறார்களே!

இது இஸ்லாமிய இறைக் கோட்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்துவதாக ஆகாதா?

சமுதாய மக்களே! கவலையோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் நிச்சயம் நேர்வழிகாட்டுவான், படைத்த அந்த அல்லாஹ்விடமே முறையிடுங்கள், அவன் உங்கள் தேவை அனைத்தையும் நிறைவேற்ற தயாராக இருக்கின்றான், அவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதில்லை.

"உங்கள் இறைவன் கூறுகிறான், என்னையே நீங்கள் பிரார்த்தித்து அழையுங்கள், நான் உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். எவர் என்னை அழைத்து வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள் சிறுமைபட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர் ஆன் 40:61)

"அல்லாஹ்வே அவனுடைய அடியானுக்கு போதுமானவனாக இல்லையா?" (அல்குர் ஆன் 39:36)

"நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள், மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள், யாவற்றையும் நன்கு அறிந்தவனைப் போன்று அவர்கள் எவருமே உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்". (அல்குர் ஆன்35:14)

நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் நல்ல அந்தஸ்து உண்டு, நாமும் அவர்களைப் போன்று நல்லவர்களாக ஆக அல்குர்ஆன், ஹதீஸ் காட்டிய வழியில் நடந்தால் மட்டுமே முடியும். நல்லவர்களுக்கு விழா எடுப்பதால் அல்ல.

சமுதாய மக்களே!

நேர்வழி பெறுங்கள், சொர்க்கம் செல்லுங்கள்! நரகத்தை பயந்து கொள்ளுங்கள்.

நன்றி: சகோதரர்.மு.சாதிக்

http://www.darulsafa.com/Tamil/samaathi.htm

2 comments:

செந்திலான் சொன்னது…

எனவே அவர்களுக்கு என்ன தீர்ப்பை அல்லாஹ் வழங்குவானோ அதேத் தீர்ப்பை தான் இவர்களுக்கும் வழங்குவான்//

என்ன தீர்ப்பை வழங்குவான்னு கொஞ்சம் நிமித்திகம் பாத்து சொன்னீர்கள் என்றால் அதை எதிர்கொள்வது எளிதாக இருக்கும். உங்கள் பிரச்சினையை மட்டும் பேசுங்கள் மற்றவர்கள் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? அப்புறம் அவர்களின் கடவுள் உங்களுக்கு என்ன தீர்ப்பை வழங்குவார்? லிபியாவில் உங்கள் அல்லா சென்றார்?

வாஞ்ஜூர் சொன்னது…

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

சுட்டியை சொடுக்கி இந்த விடியோவையும் காணுங்கள்.

===>நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். தரீக்கா என்பது இதுதானா? <===

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

...