Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, செப்டம்பர் 10

பெருநாள் வாழ்த்துக்கள்

திருபுவனத்தில் இன்று வழக்கமான உற்சாகத்துடன் பெருநாள் கொண்டாடப்பட்டது.
காலை சுப்ஹு தொழுகைக்கு மக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது . ஃபித்ரா தொகையை இரவு முதலே ஏழை மக்கள் வாங்க ஆரம்பித்தாலும் பள்ளிவாசல்களில் நிறைய நபர்கள் வழங்கினார்கள் .
பெரிய பள்ளிவாசல்

காலை ஏழு முப்பது மணி முதல் பெரிய பள்ளிவாசலில் திக்ரு முழங்க ஆரம்பித்தவுடன் அணி அணியாய் மக்கள் தொழுகைக்கு திரள ஆரம்பித்தனர்
சரியாக எட்டு மணிக்கு இமாம் அப்துல் ஜமீல் ரியாஜி அவர்கள் தொழுகையை ஆரம்பித்து குத்பா சிறப்புரையாற்றினார் பின்பு மக்கள் ஒருவரை ஒருவர் முஸாபஹா செய்து கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

புது முஸ்லிம் தெரு பள்ளிவாசல்

காலை எட்டு முப்பது மணிக்கு தொழுகை ஆரம்பம் ஆனது பின்பு இமாம் ஜமால் முஹ்யித்தீன் சிராஜி அவர்கள் பெருநாள் குத்பா சிறப்புரை ஆற்றினார்கள்.
பின்பு மக்கள் ஒருவரை ஒருவர் முஸாபஹா செய்து கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.
விளையாட்டு விழா
பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வின் திருபுவனம் கிளை சார்பாக விளையாட்டு விழா காலை பத்து முப்பது மணி முதல் ஆரம்பமானது .மாலையில் பரிசு வழங்கும் விழா நடை இருக்கிறது