Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வியாழன், செப்டம்பர் 23

புதிய உயரங்களை நோக்கி

இருப்பது போதும் என்று உங்களை உட்படுத்திக் கொள்ளாதீர்கள் (அவசியம் படிக்கவும்)

இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்?

இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

இந்தக் கேள்வி எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

யோசிக்கும் சக்திஇ செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும்இ ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை.

இருக்கும் நிலையில் நிறைவு பெற்றுவிடாமல்இ 'இப்படியே இருந்தால் எப்படி' என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை 'வசதி வட்டம்'இ 'பாதுகாப்பு வட்டம்' என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால்இ அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள்.

இருப்பது போதும் என்ற எண்ணம்இ மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல.

வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்னஇ தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவுஇ அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான்இ நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால்இ செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான்.

ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள்இ தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள்.

ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள்இ வசதி குறைந்தவர்களில் பலர் பெரும்பாலும்இ வாடகைக்குஇ வீட்டு செலவுகளுக்குஇ குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள்.

இதற்காகவே 'பொறுப்பான குடும்பத் தலைவர்' என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

இதில் என்ன வேறுபாடென்றால்இ பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள்.

தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோஇ அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட்படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
- :-நன்றி சிநேகலதா (இளையான்குடி குரல்)