Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், ஆகஸ்ட் 2

ரமழானின் சிறப்புகள்

ரமழானில் அல்லாஹ்aவுக்காக, அவனது கூலியை நாடி,
உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின்சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்)நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)நூல்:புகாரி, முஸ்லிம்நோன்பாளி செய்யக் கூடாதவைஎவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும்,விடவில்லையோ அவன் உண்ணாமல்பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும்இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரிநீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப்பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது.அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிடமுற்பட்டால் “நான் நோன்பாளி” என்றுகூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்நோன்பின் தற்காலிக சலுகைகள்நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப்பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில்அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில்(விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில்நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்டதொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்றகூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில்இருக்கும்போது நோன்பு நோற்கஎனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்புநோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கியசலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில்குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்:ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைநபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான்கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி)நூல்:அபூதாவூது, திர்மிதீநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான்பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி)நூல்:அபூதாவூதுநோன்பு நோற்றிருப்பவர் தான்நோன்பாளி என்பதை மறந்த நிலையில்உண்ணவோ பருகவோ செய்து விட்டால்(நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்)மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்,ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும்செய்திருக்கின்றான். நபி (ஸல்)அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்சஹர் செய்தல்நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்:அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள்அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும்என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்:அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர்உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில்எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள்ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது எனவிடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித்(ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்நோன்பு திறப்பதுஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான்எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜாநீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின்மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால்தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி)நூல்:திர்மிதீ, அபூதாவூது