Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

புதன், ஆகஸ்ட் 17

திப்பு சுல்தானின் வீரம் ! கட்ட பொம்மனையும் மீறும்!

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்:

" நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார்.
வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்."

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்:

ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே!

நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா?
...
நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த

மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே!

அது தான் அந்த செய்தி!

அன்று, கிழக்கு தூங்கிக் கொண்டிருந்தப் போது,

அவன் மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆங்கில கனோனால் மேடோஸ் டைலர்:

"திப்பு சுல்தான் கௌரவமான பெரிய மனிதர். அவரைப் போன்ற உயர்ந்தக் கொள்கையுடைய மனிதரை இந்தியா இனிமேல் எப்போதும் பார்க்காது. வியக்கத்தக்க திறமையும் ஊக்கமும் கொண்டு, மக்களைக் கவர்ந்து எல்லோரிடமும் அன்போடும் கருணையோடும் நடந்துக் கொண்டார். மாசா அல்லாஹ்! திப்பு சுல்தான் கண்ணியம் மிகுந்த தலைவன்!"

மாவீரன் திப்பு சுல்தான் பற்றி ஆங்கில ஜெனரல். மேஜர் டிரோம்:

திப்பு சுல்தானின் ஆட்சி தன்னிச்சையானதும், கண்டிப்பனதுமானாலும், குடிமக்களைப் பாதுகாத்து , உதவிகள் செய்து அவர்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டு நடத்தும் செங்கோலாட்சியே அல்லாமல் துன்புறுத்தும் கொடுங்கோல் ஆட்சியல்ல! திப்பு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த மக்கள் தாரளமாக பெற்று மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்தார்கள் என கூறியுள்ளார்.

தமிழ் கலைக் களஞ்சியத்தில் திப்பு சுல்தான்:

" திப்பு தூயவர். ஒழுக்கம், சமயப் பற்று, அறிவு , அரசியல் திறன் உடையவர். உருது, அரபி, கன்னடம், பாரசீக மொழிகளைப் பேசக்கூடியவர். சிறந்த நிர்வாகி. சிறந்த நூல் நிலையம் வைத்து இருந்தார். புதிய நாணயங்களை வெளியிட்டார். வேளாண்மையைப் பெருக்கினார். மதுவிலக்கை அமல்படுத்தினார். சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய கடிதங்கள் அவர் இந்து மதத்தின் இனிய நண்பர் என்பதை விளக்குன்கின்றன".

மஞ்சை வசந்தன் எழுதிய மாவீரன் திப்பு சுல்தான் வரலாற்று நூல் முழுவதுமாக படிக்க


http://content.yudu.com/Library/A1tf5m/TipuSultanHistory/resources/index.htm?referrerUrl=

- ராஜகிரி கஸ்ஸாலி அனுப்பிய மின் அஞ்சலில் இருந்து

5 comments:

Mohamed Faaique சொன்னது…

ஆனாலும், அவருடைய வரலாறு நிறையவே மாற்றப் பட்டுவிட்டது சோகமே...

வாஞ்ஜுர் சொன்னது…

CLICK THE LINKS AND READ

>>> மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- .


>>>
3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா? அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?



>>> விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்


>>> தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா?

.

பெயரில்லா சொன்னது…

கட்டபொம்மன்,அழகுமுது கோன் வீரத்தை எவனாலும் ஈடு செய்ய முடியாது

S.Lankeswaran சொன்னது…

ஐயா கட்டபொம்மன் வீரம் தனிப்பெருமை வாய்ந்தது. மாவீரன் திப்பு சுல்தானின் வீரம் நிகரற்றது. ஏன் இவர்கள் இருவரையும் ஒப்பிடுகின்றீர்கள். இது இரு இனத்தவர்களுக்கு இடையே மனசஞ்சலத்தை கொடுக்கலாம் தானே. அவர் அவர் வழியில் அவர்கள் செல்லட்டும்.

திருபுவனம் வலை தளம் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !
கட்டபொம்மனின் வீரத்தையும் ,தியாகத்தையும் நாம் எப்போதும் மறுக்கவோ, மறைக்கவோ விரும்ப வில்லை . அவரின் தியாகத்தை கொச்சைபடுத்தவும் இல்லை , ஆனால் திப்புவின் வீரம் ,நிர்வாகம், தியாகம் மூன்றும் இந்த மண்ணோடு இருந்தும் வரலாற்றில் மறைத்த்தது ஏன்? நாசாவில் அந்த மாவீரனின் புகைப்படத்தை மாட்டி கண்ணியபடுத்தும் போது இங்கே வரலாற்றையே நாடகமாக தொலைகா ட்சியில் போடும் போது இது வெறும் கற்பனை என்று போட்ட்டார்களே! இது வேதனையா வேட்ககேடா? ஒப்பீட்டு பாருங்கள் நிச்சயம் திப்பு வின் வீரம் வெல்லும் ..